சமூகப் பணி மனித நேயமுள்ள தியாக மனப் பான்மை. எதிர்பார்ப்பின்றி மற்றவர்களுக்கு உதவுவது. தனக்கு இழப்பு, இடையூறு ஏற்பட்டாலும் அதை எதிர் கொள்வது. தன்னுடைய இன்பத்தை விட மற்றவர்களின் இன்பத்தில் அல்லது துயர் நீக்கத்தில் அக்கறை கொள்வது. இயற்கையான கூட்டுறவு மனநிலை கொண்டது.
இதில் பெறுவது மனநிறைவு, குடும்பத்தினருக்கு சமூகத்தில் மரியாதை, வாழ்வியல் அனுபவம், புகழ்.
அரசியல் பணி சமூகப் பணியாக இருந்தாலும் அதிகாரம் சார்ந்ததாக இருக்கும். அதிகாரம் என்று வந்த உடனையே வலிமை என்று ஒன்று வந்து விடுகிறது. வலிமை வந்தவுடன் மெலிமை வருகிறது. வலியவர் மெலியவரை அடக்க வேண்டிஇருக்கிறது. அல்லது அவர்களைப் பயன் படுத்த வேண்டி
வுள்ளது. . தன்னை வலுவுள்ளவனாக மாற்ற சமூகத்தை கவர வேண்டிவுள்ளது. தனக்கு ஆதரவாளர்களை உருவாக்குவது.செயற்கை மனிதனாக மாறுவது. பல விசயங்களை மறைப்பது.
0 மறுமொழிக...:
Post a Comment