தமிழகத்தின் மேல் ஏற்பட்ட படை எடுப்புகள் பண்பாட்டு தாக்குதல்களால் தமிழர்களின் உண்மையான பண்பாடு பல திசைகளில் சென்று விட்டன. சுயநலம், பேராசை, பொருளாசை, அதிகார ஆசை என்று தலை தூக்க ஆரம்பித்தன. எத்தனை தாக்குதல்கள் ஏற்ப்பட்டாலும் நமது பழைய பண்பாடுகள் மறைய வில்லை. மாற வில்லை.
ஏழை எளியவர்களுக்கு உதவுவது, அவர்களுடைய அறியாமையை விலககுவது, விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவது என்று சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.
மனித ஆற்றல் எனபது எல்லோருக்கும் ஒன்று போல் இருப்பதில்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆற்றல், திறமை இருக்கும். அனைவரும் சேர்ந்தது தான் சமுதாயம், சமூகம் அனைவரும் இணைந்தால் தான் சமூகம் சிறப்பாக இயங்கும். தோன்றும்.
ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சமூகமும் அப்படித்தான்.ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருந்தால் எப்படி இருக்கும்.? ஒரு வேலையை சிறப்பாக செய்ய முடியுமா ? சிறப்பாக அந்த வேலை தான் முடியுமா ?
சமூகத்தில் சிலருக்கு படிக்க முடியும். சிலருக்கு உழைக்க முடியும். சிலருக்கு ஆலோசனை மட்டும் வழங்க முடியும். சுவையான உணவு சாப்பிட . அந்த தொழில் செய்யும் உழைக்கும் மக்கள் இல்லாவிட்டால் நமக்கு அது கிடைக்காது. விலை உயர்ந்த காரக இருந்தாலும் அதை ஓட்டும் ஓட்டுனர் இல்லாவிட்டால் நாம் நினைத்த இடத்துக்கு உடனே செல்ல முடியுமா ? இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருந்தும் பொருளாதாரத்தில் ஒரே மாதிரி இருப்பதில்லை.
அதிக ஆற்றல் உள்ளவர்கள், அதிகாரத்தில் பொருளாதாரத்தில் வலுவாக இருப்பர். ஆனால் பலர் வலு இல்லாதவர்களாகத் தான் இருபபர். அதனால்
அவர்களுடைய கல்வியும் பொருளாதாரமும் சிறப்பாக இருக்காது. ஏற்ற தாழ்வு சமூகம் இருக்கும். அதனிப் போக்க வலுவானவர்கள் வலு குறைந்த மனிதர்களுக்கு உதவ வேண்டும். இதைத்தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. அது பொருளாகவோ, அறிவாகவோ, விழிப்புனர்வகவோ இருக்கலாம்.
அவர்களுடைய கல்வியும் பொருளாதாரமும் சிறப்பாக இருக்காது. ஏற்ற தாழ்வு சமூகம் இருக்கும். அதனிப் போக்க வலுவானவர்கள் வலு குறைந்த மனிதர்களுக்கு உதவ வேண்டும். இதைத்தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. அது பொருளாகவோ, அறிவாகவோ, விழிப்புனர்வகவோ இருக்கலாம்.
பொருளாதாரத்தில் ஒரு மேல் கொள் சொல்லுவார்கள். மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்று கொடுக்க வேண்டும் என்று.
அது தான் அறம் செய்ய விரும்பு.......