Pages

Popular Posts

அறம் செய்ய விரும்பு .......

February 26, 2011

      தமிழகத்தின் மேல் ஏற்பட்ட படை எடுப்புகள் பண்பாட்டு தாக்குதல்களால் தமிழர்களின் உண்மையான பண்பாடு பல திசைகளில் சென்று விட்டன. சுயநலம், பேராசை, பொருளாசை, அதிகார ஆசை என்று தலை தூக்க ஆரம்பித்தன. எத்தனை தாக்குதல்கள் ஏற்ப்பட்டாலும் நமது பழைய பண்பாடுகள் மறைய வில்லை. மாற வில்லை. 
       ஏழை எளியவர்களுக்கு உதவுவது, அவர்களுடைய அறியாமையை விலககுவது, விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவது என்று சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.  
      மனித ஆற்றல் எனபது எல்லோருக்கும் ஒன்று போல் இருப்பதில்லை. 
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆற்றல், திறமை இருக்கும். அனைவரும் சேர்ந்தது தான் சமுதாயம், சமூகம் அனைவரும் இணைந்தால் தான் சமூகம் சிறப்பாக இயங்கும். தோன்றும். 
      ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சமூகமும் அப்படித்தான்.ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருந்தால் எப்படி இருக்கும்.? ஒரு வேலையை சிறப்பாக செய்ய முடியுமா ? சிறப்பாக அந்த வேலை தான் முடியுமா ? 
     சமூகத்தில் சிலருக்கு படிக்க முடியும். சிலருக்கு உழைக்க முடியும். சிலருக்கு ஆலோசனை மட்டும் வழங்க முடியும். சுவையான உணவு சாப்பிட . அந்த தொழில் செய்யும் உழைக்கும் மக்கள் இல்லாவிட்டால் நமக்கு அது கிடைக்காது. விலை உயர்ந்த காரக இருந்தாலும் அதை ஓட்டும் ஓட்டுனர் இல்லாவிட்டால் நாம் நினைத்த இடத்துக்கு உடனே செல்ல முடியுமா ? இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருந்தும் பொருளாதாரத்தில் ஒரே மாதிரி இருப்பதில்லை. 
    அதிக ஆற்றல் உள்ளவர்கள், அதிகாரத்தில் பொருளாதாரத்தில் வலுவாக இருப்பர். ஆனால் பலர் வலு இல்லாதவர்களாகத் தான் இருபபர். அதனால்
அவர்களுடைய கல்வியும் பொருளாதாரமும் சிறப்பாக இருக்காது. ஏற்ற தாழ்வு சமூகம் இருக்கும். அதனிப் போக்க வலுவானவர்கள் வலு குறைந்த மனிதர்களுக்கு உதவ வேண்டும். இதைத்தான்  எல்லா மதங்களும் போதிக்கின்றன. அது பொருளாகவோ, அறிவாகவோ, விழிப்புனர்வகவோ இருக்கலாம். 
    பொருளாதாரத்தில் ஒரு மேல் கொள் சொல்லுவார்கள். மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்று கொடுக்க வேண்டும் என்று.  
  
                அது தான் அறம் செய்ய விரும்பு....... 



விவசாயிகள் ...........

     இந்திய விவசாயிகள் கடனில் பிறந்து கடனில் வாழ்ந்து கடனில் மடிகிறான் என்று ஒரு தகவல் உண்டு. உண்மையும் அது தான். இயற்கையையும்
உழைப்பையும் நம்பி தன்மானத்தோடு வாழ்பவன் இந்திய விவசாயி.  விவசாயின் நிலை பல நூற்றாண்டுகளாக இப்படித்தான் இருக்கிறது. முடியாட்சி மாரி குடி யாட்சி வந்தும் சராசரி வியாசயின் நிலை மாறவில்லை.
       கணிசமான வாக்கு வங்கிகளாக கிராம விவசயிகள் இருப்பதால் இந்தியா விவசாய நாடு தான் என்று நமது தலைவர்கள் முளங்கிக் கொண்டு இருக்கின்றனர். இது வரை 78 நிதி நிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. பெரு முதலாளிகள் பன் நாட்டு நிறுவனங்களோடு ஆலோசிக்கும் நிதி
மந்திரிகள் விவசஈயிகளோடு அமருவதில்லை.எதிர் கட்சிகளோடு அமர்வதால்
அது போதும் என்கின்றனர்.


      ஒரு சதவீத பெரு வியாபாரிகளோடு அமர்ந்து அவர்கள் தேவைகள் வரி சலுகைகள் கேட்டறியப் படுகின்றன. ஆங்கில வணிக ஏடுகள் இதை பக்கம்பக்கமாக எழுதுகிறது. விவசயிகள் குறித்து மூச்சு விடுவதில்லை. அவர்களைப் பொறுத்த வரை விவசாயமும் விவசாயிகளும் பொருளாதாரத் தொல்லைகள் என எண்ணுகின்றனர்.
      இந்த மேல் தட்டு வர்க்க பத்திரிக்கையாளர்களின் வாதம் விவசாயிகளுக்கு மான்யக் கடன், வெள்ளப் பாதிப்பு இழப்பீடு, பயிர்க் காப்பிட்டுத் திட்டம், அமைப்பு சார தொழிலாளர்கள் பாதுகாப்பு, வறுமை ஒழிக்க வேலை உறுதித் திட்டம் இத்தனைக் கொடுத்ததும் விவசாயிகள் பிரச்சனை தீரவில்லை எனபது ஆகும்.
      விவசாயிகள் பிச்சைக்காரர்கள் அல்ல. சமுகத்தில் எந்த பிரிவுகளைக் காட்டிலும் சுயமரியாதையோடு உழைப்பு சார்ந்து வாழக் கூடியவர்கள். அவர்கள் தேவை இலவசங்களும் தள்ளுபடிகளும் இல்லை. தீர்வும் அல்ல. நவீன மாற்றங்களினால் ஏற்ப்படும் சவால்களுக்கு அரசு உதவ வேண்டும். உற்பத்தி பெருக்கும் திட்டத்தை விட சந்தை தான்  பெரும் பிரச்சனை. உற்பத்திக்கு உரியவிலை அதன் சந்தையில் மட்டுமே கிடைக்கும். வியாபாரிகள் என்று இடைத் தரகர்கள் விலை நிர்ணயம் செய்வதை அரசு ஒழிக்க வேண்டும். அரசு உருவாக்கும் லாப நோக்கம் அற்ற கொள் முதல் நிலயங்கள், தானியங்கள் பதப்படுத்தி பாதுகாக்கும் வசதி.
        பொதுமக்கள் தேவை, உற்பத்தி,விநியோகம் ஒளிவு மறைவு இன்றி இருத்தல் வேண்டும். இது அரசால் மட்டுமே முடிடும். காலக்  கட்டுப்பாடு , தரக் கட்டுப்பாடு  இவற்றால் விவசாயிகள் பாதிப்பே அடைகின்றனர்.
     பன்னாட்டு நிறுவனகளுக்கு அரசு செய்யும் செலவில் பத்தில் ஒரு பங்கு 
கிராமப் புற கட்டமைப்புக்கு செய்தால் பிரச்சனைகள் ஓரளவு தீர்க்க முடியும்.


     உற்பத்தி, உரியவிலை, தடையட்ட்ற  விநியோகம் பெரும்






புகைப்படம்

February 20, 2011


எம்மைப் பற்றி .................

February 18, 2011

   2011

  பெயர் .....   க.ஜெயசேகரன். 
   படிப்பு .... M .A . (பொருளாதாரம் ) -1979 -81  தூய யோவான் கல்லுரி 
                                                  பாளையம் கோட்டை -திருநெல்வேலி .       
 பிறந்த தேதி ....29 -10 -1956
 இடம் -----------   பாளையம் கோட்டை - திருநெல்வேலி 
 தாய் - தந்தை --  க.புஷ்பமணி அம்மாள் - ப. கணபதி 
 உடன் பிறப்புக்கள் ---இளையவகள் -ஒரு சகோதரி . நான்கு சகோதரர்கள். 

 குடும்பம் ------    மனைவி - மாலினி சேகர் 
                                 2 மகள்கள்  - சுகன்யஸ்ரீ M BA .. திருமணமானவர். 
                                                      கோகுல் ராஜ் M C A
                                                   
                                                      பிரம்யஸ்ரீ B.E
                                            
                                 ஒரு மகன்- கபில் ஜே. ஆனந்த்.  B.E. மூன்றம் ஆண்டு. 
                                                    கிரசென்ட் பொரியில் கல்லுரி - 
                                                                       சென்னை. 


 தொழில் --     1982 நவம்பர் 29 முதல் யூகோ வங்கி காசாளர் 

சமூக சேவை -- 1989 - 1991 -   பொது செயலர் 
                                                        திருநெல்வேலி மாவட்ட ஆதி திராவிட 
                                                        மகாஜன சங்கம்.
                                    2001 - 11       யூகோ வங்கி தொழில் சங்க நிர்வாகி 
                                 
                                    2001 --          முதல் ரோட்டரி உறுப்பினர் 
                                    2007 -08        தலைவர் -ரோட்டரி சங்கம் - 
                                                          நெல்லை புற  நகரம்.                                                                                
                                  
                                    2009       உறுப்பினர் - திருநெல்வேலி சாம்பர் ஆப் 
                                                                                      காமர்ஸ் 
                                    2010       உறுப்பினர் -திருநெல்வேலி பில்டர்ஸ் 
                                                   அசோசியாசன் ஆப் இந்தியா


                                    2011             கல்வி பொருளாதார விழிப்புணர்வு  
                                     மாநில துணை செயலர்- விடுதலை சிறுத்தைகள் கட்சி   

ஆர்வம் ..................சமூக விழிப்புணர்வு , பொருளாதார மேம்பாடு ,
                                     தமிழர் கலாசாரம் , பண்பாடு, தாய் மொழி. 






தீதும் நன்றும் .........

February 10, 2011

       தீதும் நன்றும் பிறர் தர வரா.  தமிழர்களின் முது மொழி. ஒரு தனி மனிதனுக்கு கிடைக்கக் கூடிய நன்மைக்கும் தீமைக்கும் அவன் தான் 90 சதவீதம் பொறுப் பாக்கிறான்.
 10௦ சதவீதம் தான் பிறர் சம்பத்தப் பட்டது. நம்முடைய முரண் பட்ட உணர்வுகளையும் கோவத்தையும் அடக்கினாலேயே பாதிக்கு மேல் பிரச்சனைகள் வராது. 

நம்மைப் பற்றி......நம் கருத்தைப் பற்றி....

        பிறரிடம் பேசும் போது கூடுமானவரை நம்மைப் பற்றியே பேசுவதை விட நம் கருத்தை சொல்லுவது தான் சிறந்தது. அந்தக் கருத்து  வித்தியாசமான புதிய சிந்தனையாக இருந்தால் மற்றவர்கள் ரசிப்பார்கள்.  ஏற்றுக் கொள்வார்கள்.
     தன்னைப் பற்றியே பேசிக் கொண்டு இருந்தால் பிறர் அதை கவனிக்கக் கூட மாட்டார்கள். அது நமக்கு சில நேரங்களில் தெரியாமல் கூட போய்விட்டும். நமக்கு பேச கிடைக்கும் நேரங்களில் வாய்ப்புகளைப் பயன் படுத்தி நமது கருத்துகளைப் பதிவு செய்து விட வேண்டும்.
     சுருக்கமாக பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரே செய்தியை மறுபடி மறுபடி சொல்லத் தேவை இல்லை. எதிரில் இருப்பவர் கவனிக்க வில்லை அல்லது புரிந்து கொள்ள வில்லை என்று நினைத்து திரும்ப திரும்ப சொல்லுவது வேடிக்கை யானது.
தொலை பேசியில் பேசும் போது இன்னும் கவனமாக பேச வேண்டும். எதிரில் இருப்பவர் எந்த நிலையில் இருப்பார் எனபது கூட நமக்குத் தெரியாது.
௦  10 வினாடியில் ஒரு விளம்பரம் எத்தனை சுலபமாக புரிய செய்கிறது. அப்படி இருக்கும் போது நாம் ஏன் அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.



வீண் முயற்சி ....... விடா முயற்சி............

     எந்த ஒரு புதிய  காரியமும் முதலில் செய்ய ஆரம்பிக்கும் போது உடனே வெற்றி கிடைத்து விடுவதில்லை. தொடர்து போராடும் போது அல்லது மறுபடி மறுபடி செய்யும் போது அதில் ஒரு பயிற்சி ஏற்பட்டு அதன் பின் தான் வெற்றி கிடைக்கிறது.
      முதலில் செய்யும் போது அது வீண் முயற்சி போல் மற்றவர்களால் கூறப் படும். அல்லது இகழப் படும். வெற்றி கிடைத்தப் பின் அதே முயற்சியை விடா முயற்சி என்று போற்றப் படும்.
      தொடர்ந்து செய்யும் போது தான் பயிற்சியும் வெற்றியும் கிடைக்கும். இது யதார்த்த உண்மை.


முயற்சி .....பயிற்சி.. பழக்கம் ..வழக்கம் ...அனிச்சை செயல் .......

February 6, 2011

  எந்த காரியத்திலும் மனிதனின் முதல் தேவை  பயிற்சி.முறையாக பயிற்சி.பெற்றால் தான் அந்த காரியத்தை இறுதியில் சிறப்பாக முடிக்க முடியும். பயிற்சி.பெற்ற பின் சம்பந்தப்பட்ட நிகழ்வு உயரினக்களுக்கு பழக்கமாகி விடும். மறுபடி செய்ய சிரமமோ சலிப்போ தோன்றுவது இல்லை.

       பயிற்சிக்கு முன் முயற்சி தேவை. முயற்சி பயிற்சியாகி பழக்கமாகிறது. 
           
    பழக்கமாகி தொடர்ந்து செய்யும் போது அது வழக்கமாகிறது.ஒரு மனிதனின் இயல்பு கூட அவனுடைய  வழக்கத்திலிருந்து தான் கணிக்கப் படுகிறது. பழக்க
வழக்கம் மனிதனின் உள்மனதில் ஆள் மனதில் பதிந்த பின் அது அவனின் அனிச்சை செயலாக மாறுகிறது.

 அப்படியானால் ஆரம்பம் முயற்சி பயிற்சி. அது பழக்கமாகி வழக்கமாக மாரி மனிதனின் அனிச்சை செயலாகிறது. அதுவே அவனின் இயல்பாக சமூகத்தில் காட்டப் படுகிறது. அதனால் மனிதனுக்கு ஆரம்ப பயிற்சி முக்கியம்.

உடலையும் மனதையும் நலமாக வைப்பதில் நல்ல விசயங்களில் பயிற்சி முக்கியம். அது மனிதனின் செயல திறனை அதிகமாக்கி மனிதனை நல்ல இடத்தில் அமர்த்தும்.

    அதனால் தான் முயற்சி பின் பயிற்சி தேவை என்கிறோம். பயிற்சி பழக்கமாகி
வழக்கமாகிறது. வழக்கம் அனிச்சை செயலாகிறது.


ஆளுமை --- நேரம் ................

     மனிதன் இயற்கையிடம் இருந்து பெறுவது நீர், நிலம், காற்று, பிரபஞ்சம்  போல் நேரமும் ஒன்று. ஒரு நாள் எனபது இரவு, பகல். 24 மணி நேரம். இதை எப்படி பயன் படுத்துகிறோம் எனபது அவனுடைய ஆளுமை.
    24 மணி நேரம்.---   முதல் ௮ மணி நேரம் - உழைப்பு
                                       அடுத்து ஓய்வு, இருதி - உறவு.


   உழைப்பு - மனித முன்னேற்றதிக்கு உழைப்பு மிக முக்கியம். சிறு வயதி உழைப்பு பயிற்சியாக  ஆரம்பிக்கிறது. பின் அந்த பயிற்சி அவனுடைய தேவைகளை நிறைவு செய்யும் கருவியாகிறது. மனிதனுடைய தேவை பொருளாதாரம், (பணம் ), புகழ், மன அமைதி, வாழ்க்கை தத்துவங்கள். இத்தனையும் பயிற்சி மூலம் பெற்ற உழைப்பு மூலமே பெறமுடியும்.


     ஓய்வு-   உழைத்து பெற்ற களைப்பு தீர மனிதனின் அடுத்த தேவை ஓய்வு.
இயற்க்கையின் கொடையில் இரவு உயரினங்களின் ஓய்வுக்காக படைக்கப் பட்டது.
ஓய்வு அடுத்த பகல் பொழுதை புதியதாக மறு உழைப்புக்கு தயார் செய்கிறது.


    உறவு ..ஒவ்வொரு உயிர் இனங்களும்  தன் இனங்களோடு வாழ்வது இயற்க்கை.
மரம், செடி, கோடி, விலங்குகள், பறவைகள், கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் பொதுவாக கூடி வாழ்வதையே விரும்புகின்றன. மனிதனும் உறவோடு வாழத்தான் விரும்புகிறான்.


     அதனால் ஆறு உணர்வுகளுடைய (அறிவு)  மனிதன் தன்னுடைய நேரத்தை இப்படி
உழைப்பு,ஓய்வு, உறவு என்பதற்கு செலவிடும் படி முதலில் பிரித்துக் கொள்ள வேண்டும்.



நான்கு வகை ஆற்றல் மனிதர்கள் ..........

February 4, 2011

         மனிதர்கள் ஒவ்வரும் ஒவ்வொரு ஆற்றல் படைத்தவர்கள். ஒரே குடும்பத்தில் கூட இதை பார்க்க முடியும்.  வாழ் நிலை, சூழ்நிலை மனிதனை உருவாக்கிறது.
      சில மனிதர்கள் அறிவாலும்  சிந்தனையாலும் கெட்டிக்கரர்களாக இருபபர்.ஒரு விஷயத்தை உடனே புரிந்து கொள்வர். பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லுவர். கூட்டத்தை ஒரு குழுவை வழி நடத்த தெரியும். கேட்டதை, பார்த்ததை, படித்ததை மனதில் இருத்திக் கொள்ள முடியும். இவர்களை அறிவாளிகள் அல்லது மூளையை பயன் படுத்துபவர்கள் என்று சொல்லலாம்.

      இரண்டாம் வகை மனிதர்கள் உடலால் மனத்தால் வலுவானவர்களாக இருபபர். பிரச்சனைகளை எதிர் கொள்வர். அவர்களுடைய தோள்பட்டையும், கைகளும் வலுவாக இருக்கும். அஞ்சாத  நெஞ்சுரம் உடையவர். பிரச்சனைகள் வரும் போது அவர்கள் மனதையும் கைகளையும் பயன்படுத்துவர். சோர்வடைய மாட்டார்கள். போர் வீரர்களை இந்த வகைள் கொள்ளலாம்.

     மூன்றாமவர் பேச்சாற்றல் உடையவர். தன்னிடம் உள்ளவற்றை மற்றவர்களுக்கு கொடுத்து பொருள் ஆக்கி விடுவர். வணிகர்கள் இந்த ரகத்தில் வருவர்.
 
      கைவினைக் கலைஞர்கள். கை கால்களைப் பயன் படுத்தி உற்பத்தியை பெருக்குவர்.
அல்லது உண்டு பண்ணுவர். மக்களுக்கு தேவையான பொருட்களை இவர்கள் தான் செய்து கொடுக்க முடியும். அதே போல் சோர்வுற்று இருக்கும் சமயம் ஆடல் பாடல் மூலம் மக்களின் மனதை மகிழ்சியாக வைத்துக் கொள்வர்.

     இந்த நான்கு பிரிவு மக்களும் சமூகத்திற்கு தேவை.  அறிவு மூளை எனபது தலையில் இருப்பதால் தலையில் ஈர்ந்து பிறந்தவன் அறிவாளி எனபது போன்ற கதைகள் உருவாகின. வலிமையான் கைகள் தோள்கள் தொளிளிருத்ந்து வைத்தவன் என்பதாகக்
காட்டி இருக்கும். இதைப் போல் பேச்சாற்றல் வணிகர்களாகும் இடுப்பு ஒரு இடத்தி இருந்து வணிகம் செய்வதால். அடுத்து கை கால் உழைப்பு - காலில் இருந்து பிறந்தவர் என்று கதை புனையப்பட்டது.  நாட்கள் ஆக ஆக அது முரைபடுத்தப் பட்டு மக்களை ஒடுக்கப் பயன் பட்டது.

       இப்படித்தான் சமூகம் பிரிக்கப் பட்டிருக்கும். காலப் போக்கில் பொருளாதார ஏற்ற தாழ்வு வளர இனக்குழுக்கள் சாதியாக பிரிந்து பொருளாதரத்தில் உயர்ந்தவர்கள் உயர் சாதிகளாகவும் தாழ்ந்தவர்கள் கீழ் சாதிகளாகவும் பிரிக்கப் பட்டனர்.
  

    
      

தாழ்வு, பணிவு,,,,,,,,,

                   தாழ்வு, பணிவு இவை இரண்டுக்கும் வித்தியாசம் இல்லாமல் தோன்றினாலும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு.
               பணிவு என்பது ஒரு நல்ல பண்பாடு. ஒழுக்கம்,கடமையுணர்வு, ஈகை, சேவை, ௭ல்லா உயர்களிடத்தும் அன்பாக இருப்பது, மதிப்பது, உதவுவது பணிவு.  இந்த பண்பாடு
அனைவரையும் கவரும். இந்த பண்பாளர்கள் சமூகத்தில் ஒரு நல்ல இடத்திற்கு     வரமுத்யும்.
                தாழ்வு என்பது தன்னை தானே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டு தாழ்வு மனப்பான்மையுடன் மற்றவர்களிடம் பழகுவது. தன்னுடைய தகுதியை உயர்த்துவதற்கு
முயற்சியும்  மேற்கொள்வதில்லை. இதனால் எற்படும் சிக்கல் போர்குணம் உள்ள மனநிலை. தன்னை மற்றவர்கள் மதிக்கவில்லை என்கிற எண்ணம் .
இதனால்  மற்றவர்களின் எதிர்ப்பு. அதோடு இந்த குணம் மற்றவர்களிடம் தான் உயர்ந்தவன் போல் காட்டிக் கொள்ள நடிப்பது. இந்த பண்பு மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது.
             பணிவுக்கும் தாழ்வுக்கும் வேறுபாடு கண்டு பிடித்து விட்டால் எவருடைய மனதிலும் இடம் பிடித்து விடலாம்.

அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ................

        நாம் செய்யும் தப்புகளுக்கெல்லாம் காரணம் அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம்
ஒரு காரியம் செய்ய வேண்டுமானால் முதலில் அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு செய்வது நல்லது. அதன் பின் அதில் பயிற்சி கிடிக்கும். அதைக் கொண்டு வெற்றி பெற முடியும். அறியாமல் செய்தால் பிழை தான் மிஞ்சும்.
    அடுத்து அலட்சியம். தனக்கு நன்றாக தெரியும் என்று எதையும் அலட்சியமாக செய்யக்
கூடாது. அலட்சியம் பிழையை ஏற்படுத்தும்.   அலட்சியம் எனபது கவனம் சிதறுவது .
      உணர்வு எனபது பொதுவானது. எல்லா உயிர்களும்  உணர்ச்சி வயப் படக் கூடியது தான். மனித மட்டும் அனுபவ ரீதியாக பிரச்சனிகள் வருவனவற்றை முன் கூடியே உணர்ந்தோ கேள்வி பட்டோ பிழை, தவறு வருவனவற்றை மறுபடி செய்வதில்லை. உணர்ச்சி வயப் பட்டாள் தவறு நடந்து விட வாய்ப்புகள் அதிகம்.


   அதனால் ஒரு காரியம் செய்யும் முன் அலட்சியமாக இல்லாமல், .உணர்ச்சி வசப் படாமல் ஓரளவு தெரிந்து செய்வது நல்லது.
.

பருவம்............

February 1, 2011

    மனிதன் பருவம் அடைந்த பின் உடல் இயக்கத் தேவைக்கு அதிகமாக ஊரும் வித்துக் குழம்பு உடலை விட்டு வெளியேற விளைவு கொள்கிறது. உடலில் எதுவும் தங்க முடியாது.
மலம், சிறு நீர் போல் வித்துக் குழம்பும் வெளியேற எத்தனிக்கிறது. அபோது மனிதனுக்கு பாலுறவு அவசியமாகிறது. மிகுதியான வித்து, நாதம் வெளியேற்ற ஆணுக்கு பெண்ணிடமும் பெண்ணுக்கு ஆணிடமும் நட்பு தேவைப் படுகிறது. இவ் விளைவே பால் உறவு வேட்கை. 
 
Related Posts Plugin for WordPress, Blogger...

Lorem

அம்பேத்கர்...... (1) அறம் செய்ய விரும்பு ..... (1) அறியாமை (1) அறிவு என்பது ....... (1) அலட்சியம் (1) ஆறு உணர்வுகள் (1) ஆளுமை --- நேரம் .......... (1) இந்துக்கள் .......... (1) உணர்ச்சிவயம் ...... (1) எம்மைப் பற்றி ................. (1) கல்வி பொருளாதார விழிப்புணர்வு .. (1) காந்தி (1) சட்டம் .... .விதிகள் .... (1) தாழ்வு (1) தீதும் நன்றும் ....... (1) நம்மைப் பற்றி......நம் கருத்தைப் பற்றி... (1) நான்கு வகை ஆற்றல் மனிதர்கள் ...... (1) நேரு (1) பணக்கார ஏழை இந்து தெய்வங்கள் -------- (1) பணிவு (1) பருவம்.......... (1) பலகீனமானவர்கள் .... (1) பிரச்சனைகள் ... .... . (1) புகைப்படம் (1) பொருளாதாரம்........சேமிப்பு.. (1) மந்தை உணர்வு.... (1) மனது ....... (1) முயற்சி .....பயிற்சி.. பழக்கம் ..வழக்கம் ...அனிச்சை செயல் .. (1) மூன்று வகை உழைப்பு..... (1) மொழி ...... .. (1) விவசாயிகள் .......... (1) வீண் முயற்சி ....... விடா முயற்சி........... (1) வேத சடங்கு -- ஆகம வழிபடு. (1)

Ipsum

அம்பேத்கர்...... (1) அறம் செய்ய விரும்பு ..... (1) அறியாமை (1) அறிவு என்பது ....... (1) அலட்சியம் (1) ஆறு உணர்வுகள் (1) ஆளுமை --- நேரம் .......... (1) இந்துக்கள் .......... (1) உணர்ச்சிவயம் ...... (1) எம்மைப் பற்றி ................. (1) கல்வி பொருளாதார விழிப்புணர்வு .. (1) காந்தி (1) சட்டம் .... .விதிகள் .... (1) தாழ்வு (1) தீதும் நன்றும் ....... (1) நம்மைப் பற்றி......நம் கருத்தைப் பற்றி... (1) நான்கு வகை ஆற்றல் மனிதர்கள் ...... (1) நேரு (1) பணக்கார ஏழை இந்து தெய்வங்கள் -------- (1) பணிவு (1) பருவம்.......... (1) பலகீனமானவர்கள் .... (1) பிரச்சனைகள் ... .... . (1) புகைப்படம் (1) பொருளாதாரம்........சேமிப்பு.. (1) மந்தை உணர்வு.... (1) மனது ....... (1) முயற்சி .....பயிற்சி.. பழக்கம் ..வழக்கம் ...அனிச்சை செயல் .. (1) மூன்று வகை உழைப்பு..... (1) மொழி ...... .. (1) விவசாயிகள் .......... (1) வீண் முயற்சி ....... விடா முயற்சி........... (1) வேத சடங்கு -- ஆகம வழிபடு. (1)

ContactMe

wibiya widget

Dolor

அம்பேத்கர்...... (1) அறம் செய்ய விரும்பு ..... (1) அறியாமை (1) அறிவு என்பது ....... (1) அலட்சியம் (1) ஆறு உணர்வுகள் (1) ஆளுமை --- நேரம் .......... (1) இந்துக்கள் .......... (1) உணர்ச்சிவயம் ...... (1) எம்மைப் பற்றி ................. (1) கல்வி பொருளாதார விழிப்புணர்வு .. (1) காந்தி (1) சட்டம் .... .விதிகள் .... (1) தாழ்வு (1) தீதும் நன்றும் ....... (1) நம்மைப் பற்றி......நம் கருத்தைப் பற்றி... (1) நான்கு வகை ஆற்றல் மனிதர்கள் ...... (1) நேரு (1) பணக்கார ஏழை இந்து தெய்வங்கள் -------- (1) பணிவு (1) பருவம்.......... (1) பலகீனமானவர்கள் .... (1) பிரச்சனைகள் ... .... . (1) புகைப்படம் (1) பொருளாதாரம்........சேமிப்பு.. (1) மந்தை உணர்வு.... (1) மனது ....... (1) முயற்சி .....பயிற்சி.. பழக்கம் ..வழக்கம் ...அனிச்சை செயல் .. (1) மூன்று வகை உழைப்பு..... (1) மொழி ...... .. (1) விவசாயிகள் .......... (1) வீண் முயற்சி ....... விடா முயற்சி........... (1) வேத சடங்கு -- ஆகம வழிபடு. (1)