Pages

Popular Posts

நீர், நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம் ......

May 10, 2011

    ஐம்பெரும் பூதம் என்று தமிழர்களால் சொல்லப் படும் நீர், நிலம்,நெருப்பு,காற்று மற்றும் ஆகாயம் தான் உயிர்கள் உற்பத்தியாகவும் உயிர் வாழவும் இன்றியமையாதது. 
      நுண் உயிர்கள் ஒளி சேர்க்கை செய்யும் பொது ( நீர் + காற்று + சூரிய ஒளி ) பாசி இன தாவரம் உற்பத்தியாகிறது .இது தன் நிலை மாற்றம்.  பாசியின் விரிவாக்கம் தாவரங்கள். 
     அது துளிர்விட்டு தண்டாகி, இலையாகி, அரும்பாகி, பூவாகி,காய் கனியாகி கனியில் இருந்து விதையாகிறது.  விதை மண்ணில் விழுந்து மறுபடி செடியாகிறது. . நுண் உயிரிலிருந்து கண்ணுக்கு புலப்படும் செடி கொடி உருவானது. தாவரத்தின் ஓவ்வொரு பகுதிவும் உயிர் அணுவோடு இருப்பதால் அதை பிடுங்கி வேறொரு இடத்தில் வைத்தாலும் அது துளிர் விட முடியும். தாவரங்களுக்கு உள்ள முதல் உணர்வு இப்படி இனப்பெருக்கம் செய்வது. 

       ஒரு செடியில் ஒரு இலை வறண்டு மற்ற இலை ஈரப் பதத்தோடு இருக்கும் போது வறண்ட இலை தன்னைத் தானே சுருடிக் கொண்டு பக்கத்தில் 
உள்ள இலையின் நீரை உறிஞ்சும். உயிர் வாழ இலை செய்யும் இரண்டாம் 
நிலை. அது உறிஞ்சும் பகுதி வாயாகி சுருள் புழுவாகிறது . இரண்டாம் .உணர்வு 

     அதே போல தரையில் கிடக்கும் விதைகள் போதிய நீர் ஒளி கிடைக்காமல் துளிர் விட முடியாமல் விதையின் உள்ளேயே புழுவாகி விடுகிறது. அரிசி, பருப்பு, கோதுமை போன்ற பொருட்களை கற்று புகாமல் மூடி வைத்திருந்தால் புழு உண்டாவதை பார்த்திருப்போம். 
.






நிறை ......குறை .....

   உலகிலுள்ள அனைத்து பொருள்களிலும் காரியங்களிலும் நிறைகளும் குறைகளும் பகிர்ந்து தான் இருக்கும். நமக்கு வேண்டியவைகளாக இருக்கும் போது நாம் விரும்புபவை வேண்டாத சமயம் குறையாகும் குற்றமாகும் தோன்றும். 

      இயற்க்கை கூட இதற்கு விதி விலக்கல்ல. மழை சில சமயங்களில் பிடிக்கும். சில நேரங்களில் பிடிக்காமல் போகிறது. தேவை இருக்கும் போது பிடிக்கும் மழை நமக்கு சிரமம் கொடுக்கும் போது பிடிக்காமல். இதை போல எல்லாமே சில நேரங்களில் பிடிப்பது பிடிக்காமல் போவதுண்டு. இள வெயில் . நண் பகல் வெயிலில் பிடிப்பதில்லை. 

       இதை போலத் தான் மனிதர்களும் சில நேரங்களில் பிடிக்கும். சில நேரங்களில் பிடிப்பதில்லை. நம்மோடு ஒத்த கருத்தும் நமக்கு பயன் உள்ளவர்களாக இருப்பவர்கள் முதலில் மிக மிக பிடிக்கும். அடுத்து நம் உறவினர்கள் சில நண்பர்கள் என்றாவது பயன் படுவார்கள் என்று நினைத்து பிடிப்பவர்கள் போல் பழகுவோம். ஏழை எளியவர்களுடனும் வலிமை குன்றியவர்களிடமும் மனித நேயத்தோடு பழகுவோம். ஆனாலும் இவர்கள் அனைவருடனும் கருத்து வேறுபாடு கண்டு விலகுவதும் கோபித்துக் கொள்வதும் உண்டு.  இது அவர்களிடம் நாம் காணும் குறைகள் என்று நமக்கு நாமே கூறிக்கொள்ளும் சமாதானம். 

         உண்மை என்ன வென்றல் நிறை குறை உள்ளவை தான் அனைத்துமே என்ற சிந்தனை நமக்கு வளரத் தொடங்கினால் அனைத்துமே நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும். அது தான் சிறந்த பண்பாடு. மனித நேயம். 

சமூகப் பணி, அரசியல் பணி .....

April 21, 2011

       சமூகப் பணி மனித நேயமுள்ள தியாக மனப் பான்மை. எதிர்பார்ப்பின்றி மற்றவர்களுக்கு உதவுவது. தனக்கு இழப்பு, இடையூறு ஏற்பட்டாலும் அதை எதிர் கொள்வது. தன்னுடைய இன்பத்தை விட மற்றவர்களின் இன்பத்தில் அல்லது துயர் நீக்கத்தில் அக்கறை கொள்வது. இயற்கையான கூட்டுறவு மனநிலை கொண்டது.
       இதில் பெறுவது மனநிறைவு, குடும்பத்தினருக்கு சமூகத்தில் மரியாதை, வாழ்வியல் அனுபவம், புகழ். 

          அரசியல் பணி சமூகப் பணியாக இருந்தாலும் அதிகாரம் சார்ந்ததாக இருக்கும். அதிகாரம் என்று வந்த உடனையே வலிமை என்று ஒன்று வந்து விடுகிறது. வலிமை வந்தவுடன் மெலிமை வருகிறது. வலியவர் மெலியவரை அடக்க வேண்டிஇருக்கிறது. அல்லது அவர்களைப் பயன் படுத்த வேண்டி 
வுள்ளது. . தன்னை வலுவுள்ளவனாக மாற்ற   சமூகத்தை கவர வேண்டிவுள்ளது. தனக்கு ஆதரவாளர்களை உருவாக்குவது.செயற்கை மனிதனாக மாறுவது. பல விசயங்களை மறைப்பது.  

அரசியல் கோட்பாடு

April 19, 2011

      அறிவு கோட்பாட்டுக்கும் இன்பக் கோட்பாட்டுக்கும் அரசியல் கோட்பாடு அடித்தளம். 

       விருப்பு வெறுப்பு என்ற இரு உணர்வுகளின் மோதல் இல்லாத மனித வாழ்க்கை இல்லை. 

        விருப்பப் படும் பொருளை அடைவதும் வெறுக்கப்படும் பொருளை விலக்குவதும் இன்பம் தரும். இந்த இன்பத்தைப் பெற தேவைப்படும் கருவி அதிகாரம். 

       அதிகாரம் எனபது உடல் வலிமை, அறிவாற்றல், பொருள், புகழ், செல்வம், நட்புறவு இப்படி எதன் மூலமாகவும் வெளிப்படலாம். 

      இதன் மூலம் பயிலப் படும் விருப்பு வெறுப்பு, இன்பம் துன்பம், அதிகாரம் அறிவு கொண்டு அரசியல் தத்துவம் உருவாக்க வேண்டும்.

     மனிதர்கள் அனைவரிடமும் காணப்படும் அடிப்படைப் பண்பு அச்சம்.
   1. மனிதர்களின் நான்கு துறைகள் - 1. உளவியல், 2.சமூகவியல்,
                                                                       3. சமயவியல்,    4.  இயற்கைவியல் .                                                                                                  

  2.  அரசாங்க இலக்கண வரையறைகள்: 
                                              1.ஆட்சிமுறை, 2. உரிமைகள், 3.சட்டம், 4.குற்றம், 
                                               5.தண்டனை, 6.விருதுகள் (பாராட்டு)

  3. சமயம் சார்பானது ;
                                           1. இறைவன், 2.சமயம், 3.சமய நூல்கள்ளின் ஏற்புடமை,
                                           4.  அற்புதங்கள், 5.சுவர்க்கம், 6.நரகம், 7.சமயவாதிகளின்
                                             அதிகாரம், 8. சமயத்துரையில் அரசின் ஆதிக்கம்.

  இவை மூன்றும் மனிதனை இயக்குகிறது. 

     முதலில் மனிதனின் ஆசையை நிறைவு செய்வதற்கு என அதிகாரத்தைப் பெறவும், பெருக்கிக் கொள்ளவும் ஓய்வின்றி உழைக்கிறான். செயல் படுகிறான். அனால் வாய்ப்புகளும் வசதிகளும் குறைவே. 
      
      வலிமையாலோ வஞ்சகத்தலோ ஒருவன் ஒரு பொருளை அடையலாம். 
அனால் அவனை விட வலிமையானவன் அந்த பொருள் மேல் ஆசை கொள்ளாதவரை. 

     அடுத்து இயற்கை நிலையில் ஒருவன் தன்னுடைய நலனை மட்டுமே முன்னிறுத்தி வாழ்கிறான். அதற்கு காரணம் பிறரால் தன்னுடைய உணர்வுகள்,
உரிமைகள், ஆசைகள் பாதிக்கப் படலாம் என்கிற அச்ச உணர்வுதான். 

     அனால் தனித்து வள விரும்பும் மனிதன் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த உறவுகள் இன்றி அழிவான் எனபது உடலில் மற்றும் உளவியல் சார்ந்த உண்மை. 

அறம் செய்ய விரும்பு .......

February 26, 2011

      தமிழகத்தின் மேல் ஏற்பட்ட படை எடுப்புகள் பண்பாட்டு தாக்குதல்களால் தமிழர்களின் உண்மையான பண்பாடு பல திசைகளில் சென்று விட்டன. சுயநலம், பேராசை, பொருளாசை, அதிகார ஆசை என்று தலை தூக்க ஆரம்பித்தன. எத்தனை தாக்குதல்கள் ஏற்ப்பட்டாலும் நமது பழைய பண்பாடுகள் மறைய வில்லை. மாற வில்லை. 
       ஏழை எளியவர்களுக்கு உதவுவது, அவர்களுடைய அறியாமையை விலககுவது, விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவது என்று சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.  
      மனித ஆற்றல் எனபது எல்லோருக்கும் ஒன்று போல் இருப்பதில்லை. 
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆற்றல், திறமை இருக்கும். அனைவரும் சேர்ந்தது தான் சமுதாயம், சமூகம் அனைவரும் இணைந்தால் தான் சமூகம் சிறப்பாக இயங்கும். தோன்றும். 
      ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சமூகமும் அப்படித்தான்.ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருந்தால் எப்படி இருக்கும்.? ஒரு வேலையை சிறப்பாக செய்ய முடியுமா ? சிறப்பாக அந்த வேலை தான் முடியுமா ? 
     சமூகத்தில் சிலருக்கு படிக்க முடியும். சிலருக்கு உழைக்க முடியும். சிலருக்கு ஆலோசனை மட்டும் வழங்க முடியும். சுவையான உணவு சாப்பிட . அந்த தொழில் செய்யும் உழைக்கும் மக்கள் இல்லாவிட்டால் நமக்கு அது கிடைக்காது. விலை உயர்ந்த காரக இருந்தாலும் அதை ஓட்டும் ஓட்டுனர் இல்லாவிட்டால் நாம் நினைத்த இடத்துக்கு உடனே செல்ல முடியுமா ? இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருந்தும் பொருளாதாரத்தில் ஒரே மாதிரி இருப்பதில்லை. 
    அதிக ஆற்றல் உள்ளவர்கள், அதிகாரத்தில் பொருளாதாரத்தில் வலுவாக இருப்பர். ஆனால் பலர் வலு இல்லாதவர்களாகத் தான் இருபபர். அதனால்
அவர்களுடைய கல்வியும் பொருளாதாரமும் சிறப்பாக இருக்காது. ஏற்ற தாழ்வு சமூகம் இருக்கும். அதனிப் போக்க வலுவானவர்கள் வலு குறைந்த மனிதர்களுக்கு உதவ வேண்டும். இதைத்தான்  எல்லா மதங்களும் போதிக்கின்றன. அது பொருளாகவோ, அறிவாகவோ, விழிப்புனர்வகவோ இருக்கலாம். 
    பொருளாதாரத்தில் ஒரு மேல் கொள் சொல்லுவார்கள். மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்று கொடுக்க வேண்டும் என்று.  
  
                அது தான் அறம் செய்ய விரும்பு....... 



விவசாயிகள் ...........

     இந்திய விவசாயிகள் கடனில் பிறந்து கடனில் வாழ்ந்து கடனில் மடிகிறான் என்று ஒரு தகவல் உண்டு. உண்மையும் அது தான். இயற்கையையும்
உழைப்பையும் நம்பி தன்மானத்தோடு வாழ்பவன் இந்திய விவசாயி.  விவசாயின் நிலை பல நூற்றாண்டுகளாக இப்படித்தான் இருக்கிறது. முடியாட்சி மாரி குடி யாட்சி வந்தும் சராசரி வியாசயின் நிலை மாறவில்லை.
       கணிசமான வாக்கு வங்கிகளாக கிராம விவசயிகள் இருப்பதால் இந்தியா விவசாய நாடு தான் என்று நமது தலைவர்கள் முளங்கிக் கொண்டு இருக்கின்றனர். இது வரை 78 நிதி நிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. பெரு முதலாளிகள் பன் நாட்டு நிறுவனங்களோடு ஆலோசிக்கும் நிதி
மந்திரிகள் விவசஈயிகளோடு அமருவதில்லை.எதிர் கட்சிகளோடு அமர்வதால்
அது போதும் என்கின்றனர்.


      ஒரு சதவீத பெரு வியாபாரிகளோடு அமர்ந்து அவர்கள் தேவைகள் வரி சலுகைகள் கேட்டறியப் படுகின்றன. ஆங்கில வணிக ஏடுகள் இதை பக்கம்பக்கமாக எழுதுகிறது. விவசயிகள் குறித்து மூச்சு விடுவதில்லை. அவர்களைப் பொறுத்த வரை விவசாயமும் விவசாயிகளும் பொருளாதாரத் தொல்லைகள் என எண்ணுகின்றனர்.
      இந்த மேல் தட்டு வர்க்க பத்திரிக்கையாளர்களின் வாதம் விவசாயிகளுக்கு மான்யக் கடன், வெள்ளப் பாதிப்பு இழப்பீடு, பயிர்க் காப்பிட்டுத் திட்டம், அமைப்பு சார தொழிலாளர்கள் பாதுகாப்பு, வறுமை ஒழிக்க வேலை உறுதித் திட்டம் இத்தனைக் கொடுத்ததும் விவசாயிகள் பிரச்சனை தீரவில்லை எனபது ஆகும்.
      விவசாயிகள் பிச்சைக்காரர்கள் அல்ல. சமுகத்தில் எந்த பிரிவுகளைக் காட்டிலும் சுயமரியாதையோடு உழைப்பு சார்ந்து வாழக் கூடியவர்கள். அவர்கள் தேவை இலவசங்களும் தள்ளுபடிகளும் இல்லை. தீர்வும் அல்ல. நவீன மாற்றங்களினால் ஏற்ப்படும் சவால்களுக்கு அரசு உதவ வேண்டும். உற்பத்தி பெருக்கும் திட்டத்தை விட சந்தை தான்  பெரும் பிரச்சனை. உற்பத்திக்கு உரியவிலை அதன் சந்தையில் மட்டுமே கிடைக்கும். வியாபாரிகள் என்று இடைத் தரகர்கள் விலை நிர்ணயம் செய்வதை அரசு ஒழிக்க வேண்டும். அரசு உருவாக்கும் லாப நோக்கம் அற்ற கொள் முதல் நிலயங்கள், தானியங்கள் பதப்படுத்தி பாதுகாக்கும் வசதி.
        பொதுமக்கள் தேவை, உற்பத்தி,விநியோகம் ஒளிவு மறைவு இன்றி இருத்தல் வேண்டும். இது அரசால் மட்டுமே முடிடும். காலக்  கட்டுப்பாடு , தரக் கட்டுப்பாடு  இவற்றால் விவசாயிகள் பாதிப்பே அடைகின்றனர்.
     பன்னாட்டு நிறுவனகளுக்கு அரசு செய்யும் செலவில் பத்தில் ஒரு பங்கு 
கிராமப் புற கட்டமைப்புக்கு செய்தால் பிரச்சனைகள் ஓரளவு தீர்க்க முடியும்.


     உற்பத்தி, உரியவிலை, தடையட்ட்ற  விநியோகம் பெரும்






புகைப்படம்

February 20, 2011


எம்மைப் பற்றி .................

February 18, 2011

   2011

  பெயர் .....   க.ஜெயசேகரன். 
   படிப்பு .... M .A . (பொருளாதாரம் ) -1979 -81  தூய யோவான் கல்லுரி 
                                                  பாளையம் கோட்டை -திருநெல்வேலி .       
 பிறந்த தேதி ....29 -10 -1956
 இடம் -----------   பாளையம் கோட்டை - திருநெல்வேலி 
 தாய் - தந்தை --  க.புஷ்பமணி அம்மாள் - ப. கணபதி 
 உடன் பிறப்புக்கள் ---இளையவகள் -ஒரு சகோதரி . நான்கு சகோதரர்கள். 

 குடும்பம் ------    மனைவி - மாலினி சேகர் 
                                 2 மகள்கள்  - சுகன்யஸ்ரீ M BA .. திருமணமானவர். 
                                                      கோகுல் ராஜ் M C A
                                                   
                                                      பிரம்யஸ்ரீ B.E
                                            
                                 ஒரு மகன்- கபில் ஜே. ஆனந்த்.  B.E. மூன்றம் ஆண்டு. 
                                                    கிரசென்ட் பொரியில் கல்லுரி - 
                                                                       சென்னை. 


 தொழில் --     1982 நவம்பர் 29 முதல் யூகோ வங்கி காசாளர் 

சமூக சேவை -- 1989 - 1991 -   பொது செயலர் 
                                                        திருநெல்வேலி மாவட்ட ஆதி திராவிட 
                                                        மகாஜன சங்கம்.
                                    2001 - 11       யூகோ வங்கி தொழில் சங்க நிர்வாகி 
                                 
                                    2001 --          முதல் ரோட்டரி உறுப்பினர் 
                                    2007 -08        தலைவர் -ரோட்டரி சங்கம் - 
                                                          நெல்லை புற  நகரம்.                                                                                
                                  
                                    2009       உறுப்பினர் - திருநெல்வேலி சாம்பர் ஆப் 
                                                                                      காமர்ஸ் 
                                    2010       உறுப்பினர் -திருநெல்வேலி பில்டர்ஸ் 
                                                   அசோசியாசன் ஆப் இந்தியா


                                    2011             கல்வி பொருளாதார விழிப்புணர்வு  
                                     மாநில துணை செயலர்- விடுதலை சிறுத்தைகள் கட்சி   

ஆர்வம் ..................சமூக விழிப்புணர்வு , பொருளாதார மேம்பாடு ,
                                     தமிழர் கலாசாரம் , பண்பாடு, தாய் மொழி. 






தீதும் நன்றும் .........

February 10, 2011

       தீதும் நன்றும் பிறர் தர வரா.  தமிழர்களின் முது மொழி. ஒரு தனி மனிதனுக்கு கிடைக்கக் கூடிய நன்மைக்கும் தீமைக்கும் அவன் தான் 90 சதவீதம் பொறுப் பாக்கிறான்.
 10௦ சதவீதம் தான் பிறர் சம்பத்தப் பட்டது. நம்முடைய முரண் பட்ட உணர்வுகளையும் கோவத்தையும் அடக்கினாலேயே பாதிக்கு மேல் பிரச்சனைகள் வராது. 

நம்மைப் பற்றி......நம் கருத்தைப் பற்றி....

        பிறரிடம் பேசும் போது கூடுமானவரை நம்மைப் பற்றியே பேசுவதை விட நம் கருத்தை சொல்லுவது தான் சிறந்தது. அந்தக் கருத்து  வித்தியாசமான புதிய சிந்தனையாக இருந்தால் மற்றவர்கள் ரசிப்பார்கள்.  ஏற்றுக் கொள்வார்கள்.
     தன்னைப் பற்றியே பேசிக் கொண்டு இருந்தால் பிறர் அதை கவனிக்கக் கூட மாட்டார்கள். அது நமக்கு சில நேரங்களில் தெரியாமல் கூட போய்விட்டும். நமக்கு பேச கிடைக்கும் நேரங்களில் வாய்ப்புகளைப் பயன் படுத்தி நமது கருத்துகளைப் பதிவு செய்து விட வேண்டும்.
     சுருக்கமாக பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரே செய்தியை மறுபடி மறுபடி சொல்லத் தேவை இல்லை. எதிரில் இருப்பவர் கவனிக்க வில்லை அல்லது புரிந்து கொள்ள வில்லை என்று நினைத்து திரும்ப திரும்ப சொல்லுவது வேடிக்கை யானது.
தொலை பேசியில் பேசும் போது இன்னும் கவனமாக பேச வேண்டும். எதிரில் இருப்பவர் எந்த நிலையில் இருப்பார் எனபது கூட நமக்குத் தெரியாது.
௦  10 வினாடியில் ஒரு விளம்பரம் எத்தனை சுலபமாக புரிய செய்கிறது. அப்படி இருக்கும் போது நாம் ஏன் அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.



வீண் முயற்சி ....... விடா முயற்சி............

     எந்த ஒரு புதிய  காரியமும் முதலில் செய்ய ஆரம்பிக்கும் போது உடனே வெற்றி கிடைத்து விடுவதில்லை. தொடர்து போராடும் போது அல்லது மறுபடி மறுபடி செய்யும் போது அதில் ஒரு பயிற்சி ஏற்பட்டு அதன் பின் தான் வெற்றி கிடைக்கிறது.
      முதலில் செய்யும் போது அது வீண் முயற்சி போல் மற்றவர்களால் கூறப் படும். அல்லது இகழப் படும். வெற்றி கிடைத்தப் பின் அதே முயற்சியை விடா முயற்சி என்று போற்றப் படும்.
      தொடர்ந்து செய்யும் போது தான் பயிற்சியும் வெற்றியும் கிடைக்கும். இது யதார்த்த உண்மை.


முயற்சி .....பயிற்சி.. பழக்கம் ..வழக்கம் ...அனிச்சை செயல் .......

February 6, 2011

  எந்த காரியத்திலும் மனிதனின் முதல் தேவை  பயிற்சி.முறையாக பயிற்சி.பெற்றால் தான் அந்த காரியத்தை இறுதியில் சிறப்பாக முடிக்க முடியும். பயிற்சி.பெற்ற பின் சம்பந்தப்பட்ட நிகழ்வு உயரினக்களுக்கு பழக்கமாகி விடும். மறுபடி செய்ய சிரமமோ சலிப்போ தோன்றுவது இல்லை.

       பயிற்சிக்கு முன் முயற்சி தேவை. முயற்சி பயிற்சியாகி பழக்கமாகிறது. 
           
    பழக்கமாகி தொடர்ந்து செய்யும் போது அது வழக்கமாகிறது.ஒரு மனிதனின் இயல்பு கூட அவனுடைய  வழக்கத்திலிருந்து தான் கணிக்கப் படுகிறது. பழக்க
வழக்கம் மனிதனின் உள்மனதில் ஆள் மனதில் பதிந்த பின் அது அவனின் அனிச்சை செயலாக மாறுகிறது.

 அப்படியானால் ஆரம்பம் முயற்சி பயிற்சி. அது பழக்கமாகி வழக்கமாக மாரி மனிதனின் அனிச்சை செயலாகிறது. அதுவே அவனின் இயல்பாக சமூகத்தில் காட்டப் படுகிறது. அதனால் மனிதனுக்கு ஆரம்ப பயிற்சி முக்கியம்.

உடலையும் மனதையும் நலமாக வைப்பதில் நல்ல விசயங்களில் பயிற்சி முக்கியம். அது மனிதனின் செயல திறனை அதிகமாக்கி மனிதனை நல்ல இடத்தில் அமர்த்தும்.

    அதனால் தான் முயற்சி பின் பயிற்சி தேவை என்கிறோம். பயிற்சி பழக்கமாகி
வழக்கமாகிறது. வழக்கம் அனிச்சை செயலாகிறது.


ஆளுமை --- நேரம் ................

     மனிதன் இயற்கையிடம் இருந்து பெறுவது நீர், நிலம், காற்று, பிரபஞ்சம்  போல் நேரமும் ஒன்று. ஒரு நாள் எனபது இரவு, பகல். 24 மணி நேரம். இதை எப்படி பயன் படுத்துகிறோம் எனபது அவனுடைய ஆளுமை.
    24 மணி நேரம்.---   முதல் ௮ மணி நேரம் - உழைப்பு
                                       அடுத்து ஓய்வு, இருதி - உறவு.


   உழைப்பு - மனித முன்னேற்றதிக்கு உழைப்பு மிக முக்கியம். சிறு வயதி உழைப்பு பயிற்சியாக  ஆரம்பிக்கிறது. பின் அந்த பயிற்சி அவனுடைய தேவைகளை நிறைவு செய்யும் கருவியாகிறது. மனிதனுடைய தேவை பொருளாதாரம், (பணம் ), புகழ், மன அமைதி, வாழ்க்கை தத்துவங்கள். இத்தனையும் பயிற்சி மூலம் பெற்ற உழைப்பு மூலமே பெறமுடியும்.


     ஓய்வு-   உழைத்து பெற்ற களைப்பு தீர மனிதனின் அடுத்த தேவை ஓய்வு.
இயற்க்கையின் கொடையில் இரவு உயரினங்களின் ஓய்வுக்காக படைக்கப் பட்டது.
ஓய்வு அடுத்த பகல் பொழுதை புதியதாக மறு உழைப்புக்கு தயார் செய்கிறது.


    உறவு ..ஒவ்வொரு உயிர் இனங்களும்  தன் இனங்களோடு வாழ்வது இயற்க்கை.
மரம், செடி, கோடி, விலங்குகள், பறவைகள், கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் பொதுவாக கூடி வாழ்வதையே விரும்புகின்றன. மனிதனும் உறவோடு வாழத்தான் விரும்புகிறான்.


     அதனால் ஆறு உணர்வுகளுடைய (அறிவு)  மனிதன் தன்னுடைய நேரத்தை இப்படி
உழைப்பு,ஓய்வு, உறவு என்பதற்கு செலவிடும் படி முதலில் பிரித்துக் கொள்ள வேண்டும்.



நான்கு வகை ஆற்றல் மனிதர்கள் ..........

February 4, 2011

         மனிதர்கள் ஒவ்வரும் ஒவ்வொரு ஆற்றல் படைத்தவர்கள். ஒரே குடும்பத்தில் கூட இதை பார்க்க முடியும்.  வாழ் நிலை, சூழ்நிலை மனிதனை உருவாக்கிறது.
      சில மனிதர்கள் அறிவாலும்  சிந்தனையாலும் கெட்டிக்கரர்களாக இருபபர்.ஒரு விஷயத்தை உடனே புரிந்து கொள்வர். பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லுவர். கூட்டத்தை ஒரு குழுவை வழி நடத்த தெரியும். கேட்டதை, பார்த்ததை, படித்ததை மனதில் இருத்திக் கொள்ள முடியும். இவர்களை அறிவாளிகள் அல்லது மூளையை பயன் படுத்துபவர்கள் என்று சொல்லலாம்.

      இரண்டாம் வகை மனிதர்கள் உடலால் மனத்தால் வலுவானவர்களாக இருபபர். பிரச்சனைகளை எதிர் கொள்வர். அவர்களுடைய தோள்பட்டையும், கைகளும் வலுவாக இருக்கும். அஞ்சாத  நெஞ்சுரம் உடையவர். பிரச்சனைகள் வரும் போது அவர்கள் மனதையும் கைகளையும் பயன்படுத்துவர். சோர்வடைய மாட்டார்கள். போர் வீரர்களை இந்த வகைள் கொள்ளலாம்.

     மூன்றாமவர் பேச்சாற்றல் உடையவர். தன்னிடம் உள்ளவற்றை மற்றவர்களுக்கு கொடுத்து பொருள் ஆக்கி விடுவர். வணிகர்கள் இந்த ரகத்தில் வருவர்.
 
      கைவினைக் கலைஞர்கள். கை கால்களைப் பயன் படுத்தி உற்பத்தியை பெருக்குவர்.
அல்லது உண்டு பண்ணுவர். மக்களுக்கு தேவையான பொருட்களை இவர்கள் தான் செய்து கொடுக்க முடியும். அதே போல் சோர்வுற்று இருக்கும் சமயம் ஆடல் பாடல் மூலம் மக்களின் மனதை மகிழ்சியாக வைத்துக் கொள்வர்.

     இந்த நான்கு பிரிவு மக்களும் சமூகத்திற்கு தேவை.  அறிவு மூளை எனபது தலையில் இருப்பதால் தலையில் ஈர்ந்து பிறந்தவன் அறிவாளி எனபது போன்ற கதைகள் உருவாகின. வலிமையான் கைகள் தோள்கள் தொளிளிருத்ந்து வைத்தவன் என்பதாகக்
காட்டி இருக்கும். இதைப் போல் பேச்சாற்றல் வணிகர்களாகும் இடுப்பு ஒரு இடத்தி இருந்து வணிகம் செய்வதால். அடுத்து கை கால் உழைப்பு - காலில் இருந்து பிறந்தவர் என்று கதை புனையப்பட்டது.  நாட்கள் ஆக ஆக அது முரைபடுத்தப் பட்டு மக்களை ஒடுக்கப் பயன் பட்டது.

       இப்படித்தான் சமூகம் பிரிக்கப் பட்டிருக்கும். காலப் போக்கில் பொருளாதார ஏற்ற தாழ்வு வளர இனக்குழுக்கள் சாதியாக பிரிந்து பொருளாதரத்தில் உயர்ந்தவர்கள் உயர் சாதிகளாகவும் தாழ்ந்தவர்கள் கீழ் சாதிகளாகவும் பிரிக்கப் பட்டனர்.
  

    
      

தாழ்வு, பணிவு,,,,,,,,,

                   தாழ்வு, பணிவு இவை இரண்டுக்கும் வித்தியாசம் இல்லாமல் தோன்றினாலும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு.
               பணிவு என்பது ஒரு நல்ல பண்பாடு. ஒழுக்கம்,கடமையுணர்வு, ஈகை, சேவை, ௭ல்லா உயர்களிடத்தும் அன்பாக இருப்பது, மதிப்பது, உதவுவது பணிவு.  இந்த பண்பாடு
அனைவரையும் கவரும். இந்த பண்பாளர்கள் சமூகத்தில் ஒரு நல்ல இடத்திற்கு     வரமுத்யும்.
                தாழ்வு என்பது தன்னை தானே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டு தாழ்வு மனப்பான்மையுடன் மற்றவர்களிடம் பழகுவது. தன்னுடைய தகுதியை உயர்த்துவதற்கு
முயற்சியும்  மேற்கொள்வதில்லை. இதனால் எற்படும் சிக்கல் போர்குணம் உள்ள மனநிலை. தன்னை மற்றவர்கள் மதிக்கவில்லை என்கிற எண்ணம் .
இதனால்  மற்றவர்களின் எதிர்ப்பு. அதோடு இந்த குணம் மற்றவர்களிடம் தான் உயர்ந்தவன் போல் காட்டிக் கொள்ள நடிப்பது. இந்த பண்பு மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது.
             பணிவுக்கும் தாழ்வுக்கும் வேறுபாடு கண்டு பிடித்து விட்டால் எவருடைய மனதிலும் இடம் பிடித்து விடலாம்.

அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ................

        நாம் செய்யும் தப்புகளுக்கெல்லாம் காரணம் அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம்
ஒரு காரியம் செய்ய வேண்டுமானால் முதலில் அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு செய்வது நல்லது. அதன் பின் அதில் பயிற்சி கிடிக்கும். அதைக் கொண்டு வெற்றி பெற முடியும். அறியாமல் செய்தால் பிழை தான் மிஞ்சும்.
    அடுத்து அலட்சியம். தனக்கு நன்றாக தெரியும் என்று எதையும் அலட்சியமாக செய்யக்
கூடாது. அலட்சியம் பிழையை ஏற்படுத்தும்.   அலட்சியம் எனபது கவனம் சிதறுவது .
      உணர்வு எனபது பொதுவானது. எல்லா உயிர்களும்  உணர்ச்சி வயப் படக் கூடியது தான். மனித மட்டும் அனுபவ ரீதியாக பிரச்சனிகள் வருவனவற்றை முன் கூடியே உணர்ந்தோ கேள்வி பட்டோ பிழை, தவறு வருவனவற்றை மறுபடி செய்வதில்லை. உணர்ச்சி வயப் பட்டாள் தவறு நடந்து விட வாய்ப்புகள் அதிகம்.


   அதனால் ஒரு காரியம் செய்யும் முன் அலட்சியமாக இல்லாமல், .உணர்ச்சி வசப் படாமல் ஓரளவு தெரிந்து செய்வது நல்லது.
.

பருவம்............

February 1, 2011

    மனிதன் பருவம் அடைந்த பின் உடல் இயக்கத் தேவைக்கு அதிகமாக ஊரும் வித்துக் குழம்பு உடலை விட்டு வெளியேற விளைவு கொள்கிறது. உடலில் எதுவும் தங்க முடியாது.
மலம், சிறு நீர் போல் வித்துக் குழம்பும் வெளியேற எத்தனிக்கிறது. அபோது மனிதனுக்கு பாலுறவு அவசியமாகிறது. மிகுதியான வித்து, நாதம் வெளியேற்ற ஆணுக்கு பெண்ணிடமும் பெண்ணுக்கு ஆணிடமும் நட்பு தேவைப் படுகிறது. இவ் விளைவே பால் உறவு வேட்கை. 

மனது ........

January 31, 2011

       மனது ஓர் பூதக் கண்ணாடி போன்றது.
      எதை நினைக்கிறோமோ அதை பன்மடங்கு பெருக்கி காட்டும். மகிழ்ச்சியாக நினைத்தால் மகிழ்ச்சி பன்மடங்கு தெரியும். வருத்தமாக நினைத்தால் பல மடங்கு வருத்தம் தெரியும்.  அதேபோல பயமாக நினைத்தால்  மனது முழுவதும் பயம் தொற்றிக் கொள்ளும்.


    மன நிறைவு தான் மகிழ்ச்சி சுரங்கம். 

பலகீனமானவர்கள் .........

January 27, 2011

     உலகில் பலர் பலகீனமானவர்களாகத் தான் இருக்கிறார்கள். வலுவானவர்கள் பலகீன மானவர்களை அடக்கி ஒடுக்கி அடிமைப் படுத்துகின்றனர்.
பலகீனமானது இருப்பிடம் - மனது, உடம்பு, பொருளாதாரம், கல்வி -- இவை
                                                  முக்கியமானவை .
1 . மனது.  -   உள்ளத்தால் பலகீன மானவர்கள்
                       எதிரிகளின் அச்சுறுத்தல், பயந்த மன நிலை, கூச்ச சுபாவம்,
                       தாழ்வு மனப்பான்மை, தனக்கு பல தகவல்கள் தெரியவில்லை என்று
                                                                  தன்னிடம் பல தகுதிகள் இல்லை என்ற எண்ணம்,
2 . உடல்  -- உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள்,
                    பாலினம் .  ஆண், பெண்
                    மாற்றுத் திறனாளிகள் -  (ஊனமுற்றோர் )
3 . பொருளாதாரம் -- சரியான வேலை வாய்ப்பு இல்லாமை,
                                      உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமை,
                                      பெரிய குடும்ப சுமை,
                                      வரவு  செலவு அறியாமை,
                                      தவறான முதலீடு,
                                      தவறான குணநலன்கள், கேளிக்கை, ஆடம்பரம்
4 . கல்வி --  கல்வி கற்க வாய்ப்பு இல்லாமை,
                      கற்றதை நினைவில் கொள்ளும் ஆற்றல் இல்லாமை,
                      பயிற்சி, இயற்கையான திறமை இல்லாமை,
                      சூழ்நிலை -   சேர்க்கை, இருப்பிடம்,


இவை நான்கிலும் விழிப்புணர்வு தேவை. 

இந்துக்கள் ...............

January 22, 2011

    இந்தியா பெரும்பான்மையான இந்து மக்கள் கொண்ட நாடு என்று சொல்லப்படுகிறது.   ஒரு மளிகைக் கடையில் எல்லா சாமான்களும் கிடைக்கும். ஆனால் மளிகை மட்டும் கிடைக்காது. அது போல இந்து சமூகத்தில், ஆயிரத்துக்கும்  மேற்பட்ட சாதிகள் உள்ள  அமைப்பில் இந்து என்று எவரும் கிடையாது. சாதிகள் என்ற செங்கற்களால் கட்டப்பட்டது தான் இந்து சமூகம். அது பல்வேறு சாதியல் பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவை அனைத்தையும் ஒருங்கினைத்து இந்து பண்பாடாக மாற்றவே இந்து மத வாதிகள் முயல்கின்றனர்.


        உதாரணம் --  வேதங்களை நம்புபவர்கள் , நம்பாதவர், இயற்கையை வணங்குபவர், இறந்த்வர்கள், சமூகத்திற்காக உயீர் நீத்தவர், தியாகம் செய்தவர், ஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்கள்,  இடங்கை, வலங்கை பிரிவினர், நாமம் போட்டவர் விபூதி பூசியவர்
என்று முரண்பாட்டு தெய்வங்கள் வழி பாட்டு முறைகள் உள்ளன.


      பெரும் தெய்வங்கள், சிறு தெய்வங்கள், கிராம தெய்வங்கள், குடும்ப தெய்வங்கள் இப்படியும் பல தெய்வங்கள் தெய்வ நம்பிக்கைகள், சடங்குகள் உள்ளன. 

மூன்று வகை உழைப்பு........

January 21, 2011

        உழைப்பை அகம், புறம் என்று பிரிப்போம். . வெளியல் தெரியாமல் உழைப்பது அகம். தெரிந்த்தது  உழைப்பது புறம். அறிவு வெளியில் தெரியாமல் செயல்படுவது. உடல்
உழைப்பு வெளியில்  தெரிந்தது செயல்படுவது. இவை இரண்டும் போக இரண்டையும் இணைத்து செயல் படுவது மனம். மனம் உற்சாகமாக இருந்தால் மட்டும் தான் அந்த உழைப்பு வெற்றி பெற்றதாக இருக்கும்.
    அப்படியானால் மனதை மூன்றாவது உழைப்பாக கொள்வோம்.
 
      அனுபவமுள்ளவர்கள், படித்தவர்கள் அறிவைக் கொண்டு செயல்படுவர்.
மற்றவரையும் தங்களுடைய ஆலோசனை படி  செயல்படச் செய்வர். இது அகச் செயல்.
   இரண்டாவது ரகம் உடல் உழைப்பை மட்டும் கொண்டு செயல் படுவது. உடல் உழைப்புக்கு எச்சரிக்கை உணர்வைத்தவிர வேறு  அதிக சிந்தனையோ, அறிவோ தேவையில்லை. சொன்னதைச்  செய்யவேண்டும். சொந்தமாகச்  செய்யத் தேவையில்லை. இவர்கள் மரபு வழி மாற்றங்களை பார்த்து அப்படியே செய்துகொள்வர். இது புறச் செயல்.
   மூன்றாவது பலருக்குப் புரியாத தெரியாத அக உழைப்பு -உள்ளம், மனது. உழைக்கும் போது மனதில் உறுதி வேண்டும் என்று சொல்லுவது இந்த மனது சார்ந்த உழைப்பைத் தான்  .உழைக்கும் போது மனதில் சலிப்பு ஏற்படாமல் உறுதியுடன் உழைப்பது.
  மனம், உள்ளம் வலிமையாக இருக்க சூழ்நிலைகள் முக்கிய காரணம். உடல் பலம், பண பலம், சாதி மத பலம், அதிகார பலம், சேர்க்கை கூட பலம் தான். இவைகள் மனிதனுக்கு அறிவை விட உற்சாகத்தைக் கொடுக்கிறது. உறுதியான மனம் கொண்டவன் வெற்றிக்கு மேல் வெற்றி கொள்கிறான்.

    உதாரணங்கள் : உடல் உழைப்பு - விவசாயர்கள் ,கைவினைக் கலைஞர்கள்
                        அறிவியல் உழைப்பு - விஞ்ஞானி, மருத்துவர், சட்டவல்லுநர்,
                         உள்ளம், மனது உழைப்பு -போர்வீரர்கள் ,அரசர்கள் மந்திரி அரசியல்வாதிகள்


பணக்கார ஏழை இந்து தெய்வங்கள் ------------

    சிலர் இந்து நாடு என்று சொல்லுகிற இந்தியாவில் மக்களிடம் சகோதரத்துவமும் இல்லை. பொருளாதார சமத்துவமும் இல்லை.மக்களிடம் மட்டும் எனபது இல்லை, கடவுளர்களிடமும் சமத்துவம் இல்லை.
  இந்து  தெய்வங்கள் பெரும் தெய்வம் சிறு தெய்வம் என்று முதலில் பிரிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் மக்கள் பெரு தெய்வ நம்பிக்கை கொண்டுள்ளனர். அடித்தட்டு மாக்கள் என்று அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் சிறு தெய்வங்களை வழிபடுகின்றனர். இவர்கள் பெரும் தெய்வங்களையும் வழிபடுவது உண்டு. சுதந்திரத்திற்கு முன் இவர்களை வழிபட அதாவது கோவில் உள் கூட விடாத நிலை இருந்தது.
    சிவன், பெருமாள் அல்லது கிருஷ்ணன் சக்தி அல்லது அதற்கு ஈடான பெண் தெய்வம் பெரும் தெய்வங்களாக சித்தரிக்கப் பட்டிருந்தது. இத் தெய்வங்களுக்கு மன்னர்கள் உதவியுடன் பெரிய கோவில்கள் கட்டப்பட்டன. ஏழை எளிய மக்களின் வரிப் பணம் மற்றும் ஊழியம் (கூலி வாங்காமல் வேலை செய்வது .)  மூல பெரிய கோவில்கள் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் என்று ஓன்று செய்துவிட்டு கட்டியவர்களையே உள்ளே விடுவதில்லை.
   சிறு தெய்வங்கள் என்பது பொதுவாக காவல் தெய்வங்கள். இந்தியா தமிழக மக்கள் பெரும்பாலும் விவசாயத்தியே தொழிலாகக் கொண்டவர்கள். அத்னால் இயற்க்கை ஓடு ஒன்றி இணைந்து வாழ்ந்தனர். விவசாயம், மற்றும் கால் நடைகள் பாதுகாப்பாக இருக்க அவர்களுக்கு இயற்க்கை சார்ந்த நபிக்கைகள் தான் இருந்தனவே ஒழிய வேத மந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை. தங்கள் துன்பம் போக்கிக் கொள்ளவும், மகிழ்ச்சி மற்றும் வழமை பெறவும் இச் சிருதெய்வங்களையே நம்பி வணங்கினர். அது மரமாகவோ,கல்லாகவோ, மண்வைத்து கட்டப் பட்ட பீடமாகவோ இருந்தது. இவற்றை அடித்தட்டு மக்கள் வணங்கி வந்தனர்.

   

மொழி ...... ......

January 20, 2011

        நீண்ட நெடும் காலமாக மொழியை ஒரு கருவியாக மக்கள் சித்தரித்து வந்தனர்.

    பேச்சி மொழி, இலக்கிய மொழி, நாடக மொழி, வட்டார மொழி என வித்தியாசங்கள் உண்டு. தங்கள் எண்ணங்களை வெளி இடவும் பிறர் எண்ணங்களை கருத்துக்களை புரிந்து கொள்ளவும் மொழி ஒரு  க்ருவியாகப  பயன்பட்டது. 
  
      மேலோட்டமாக பார்த்தல் மொழி ஒரு கருத்தை வெளிப்படுத்தும்.சைகைகள், 
பாவனைகள், உருவம் ,வடிவம், அமைப்பு, சமிக்கைகள், கோடுகள்,  வண்ணம் கூட மொழி அர்த்தத்தில் கையாளப்பட்டன.  

       சமூகம் மொழியின் வாயிலாகவே இயங்குகிறது. தான் இருத்தலை 
வெளிப்படுத்துகிறது. சமூக நடவடிக்கைகள் நடைபெறுகின்றன . முத்லில் பெற்றோர் 
குழந்தைகள் உறவில் ஆரம்பித்து ஆசிரியர் மாணவன், மதகுரு சடங்குகள், அரசின் சட்டங்கள் அதிகாரங்கள், செயல்பாடுகள், நீதிமன்ற நடவடிக்கைகள் நிர்வாக பணிகள் இப்படி அனைத்து சமூக பணிகளும் மொழியின் மூலமாகவே செயல் படுகின்றன. 
அப்படியானால் மொழி இல்லையேல் சமூகம் இல்லை. சமூகம் இல்லையேல் மொழி இல்லை. 

     வளர்ச்சி போக்கில மக்கள், சமூகம், தேசிய இனம், தேசியங்கள் என பரிணாமித்தது .மொழியே தேசத்தை, இனத்தை அடையாளப் படுத்தியது.   பிரஞ்சி, ஜெர்மன், சைனா இப்படி பிரஞ்சி பேசுபவர்கள் பிரஞ்சி தேசம், ஜெர்மன் பேசுபவர்கள் ஜெர்மன் தேசம், சீனம் பேசுபவர்கள் சீன தேசம், ஜப்பான் இப்படி மொழி வாரியாக தேசம் அடையாளப் படுத்தப்பட்டுகிறது.

  ஒரு நாடு மற்ற நாட்டடை பிடித்தாலோ ஏதோ ஒரு வகையில் அடிமைப்படுத்த நினைத்தாலோ  முதலில் அந்த நாட்டின் மொழியை பின்னுக்குத் தள்ளிவிட்டு தன்னுடைய மொழியை முன்னிருத்தும்.  ஆட்சி மொழி, அதிகார மொழி, கல்வி மொழி நீதிமன்ற மொழி இப்படி முக்கியமான நிகழ்வுகளிளெல்லாம் அந்நிய மொழியை  பயன்படுத்த ஆரம்பிக்கும். சமூக மொழி தானாக பின்னுக்குப் போய்விடும்.

     தங்களுடைய நலனுக்கு ஏற்ப கருத்தாக்கங்கள் இலக்கியங்கள் செய்திகள் என்று அந்நிய மொழி தாராளமாக அடிமைப்படுத்த நாட்டில் புழக்கத்தில் வந்து மக்கள் செய்திகள் எல்லாம் அநிநிய செய்த்களாக மாறுகின்றன. அந்நிய  மொழி படித்தால் தான் அரசு வேலை என்கின்ற நிலை கூட வந்துவிடும். இப்படியே அந்நிய மொழி நிலைநாட்டப் படும்.

      இப்படித்தான் தேசிய மொழியாக இருந்த தமிழ் மொழி ஆங்கில ஆட்சியல் பின்னுக்குத் தள்ளப் பட்டது. ஆங்கிலேயர் சென்றபின்னும் கூட பல மொழிக்ழ்ளைக் கொண்ட இந்தியாவில் டெல்லி அதிகாரத்தை வைத்துக் கொண்டதால் ஆங்கிலம் தவிர்க்க முடியாத மொழியாகி விட்டது.

     

சட்டம் .... .விதிகள் .....

January 17, 2011

       மக்களின் வாழ்க்கை முறையை நிலை நிறுத்த விதிகள் தேவைப்பட்டன.
திருச்சபைகள், மதக் குருக்கள் விதிகளை முதலில் வகுத்தனர். பிறகு சமூகக் குழுக்கள்  வர்க்கங்கள் அடுத்து தொழில் சங்கங்கள் தங்கள் தங்களுக்கென்று ஒரு சமூக நடத்தையை அமைத்துக் கொண்டன. இவற்றை தங்கள் கட்டளைகள் ஆணைகள் கொண்டு நடைமுறைப் படுத்துகின்றன.


     சட்டம் என்பது அடிப்படையல் ஒரு கட்டாயப் படுத்தும் முறை தான். சமூகத்தில் விரும்பப் படுகின்ற சில நிலைமைகளை நிலை நாட்ட சட்டம் தேவைப் படுகின்றது.


     நவீன காலத்தில் பாராளுமன்றம் தவிர்த்து நீதி மன்றங்கள் தன்னுடைய தீர்ப்புகள்
மூலம் சட்டம் இயற்றும் அங்கமாக உருவாகி வருகிறன.


    சட்டம் அரசின் படைப்பாக இருப்பினும் பெரும்பான்மையான மக்கள் அவற்றை தங்கள்
விருப்பம் போல் மாற்றிக் கொள்ளவோ , அப்படியே ஏற்றுக் கொள்ளவோ முடியாது.
 'அதில் அரசியல் அமைப்புக்கு உட்பட்ட ' என்று சேர்த்துக் கொள்ளப்பட்டு நாட்டின் இறையண்ண்மையை காத்துக் கொள்கிறது.


    இதற்கு எடுத்துக் காட்டு - இந்திய தனியார் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதர்க்கு
சிலர் எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். .
  

காந்தி, நேரு, அம்பேத்கர்.......

                  இந்தியாவை உருவாக்கியவர்கள் காந்தி, நேரு, அம்பேத்கர் .


   காந்தி -- அரசியலிலும் சமூகத்திலும் விடுதலை வேண்டும். இந்தியா பெரும்பாலும்
                  கிராமங்களால் ஆனதால் கிராமங்கள் வளர வேண்டும். ஓன்று படவே முடியாத
                  பல குணம் கொள்கை தெய்வ நம்பிக்கை கொண்ட இந்தியர்களை ஒரு  
                 அணியில்   இணைத்தவர். .


  நேரு --   சமூகம் பொருளாதாரம் வளர வேண்டும். தொழில் துறை முன்னேற
                 வேண்டும்.
                 மக்கள் வரிப்  பணத்தில் பொதுதுரை முதலீடு. -  விவசாயம் முன்னேற்றம்.
                பசுமைப் புரட்சி,


 அம்பேத்கர் --  சாதி பேத மற்ற சமுத்துவ சமுதாயம்.  அடிமை வாழ்வு ஒழிப்பு. பெண்கள்
                          தொழிலாளர்கள் முன்னேற்றம்.
                          பொருளாதாரம் அரசியலை விட சமூக மரியாதை.


                          ஏற்ற தாழ்வை விட உயர்வு தாழ்வு நீங்க வேண்டும்.


.

வேத சடங்கு -- ஆகம வழிபடு.

     இந்திய பண்பாட்டில் இந்து என்று சொல்லபடுபவர்கள் பல வழிப்பாட்டு முறைகளை கையாளுகிறார்கள்.
    சடங்குகளைப் பொறுத்தவரை ( வைதீக ) வேத சடங்குகள். இவை அக்கினி சடங்குகள். ஒவவொரு காரியத்திரக்கும் தீ உண்டாக்கி அக்னி வளர்த்து அதில் பொருள்களை அர்பணிக்க வேண்டும். தீயில் போடும் பொருட்கள் தெய்வத்தை சென்றடைகின்றன. தெய்வங்களின் வாய் அக்னி.
    ஆகம வழிபாட்டில் தீக்கு வேலை இல்லை. வழிபட்டு பொருட்களை தெய்வத்தின் முன் படைத்தது காட்டிவிட்டு தானே பயன்படுத்திக் கொள்ளலாம்.  தெய்வத்தை நீராட்டி அலங்கரித்து புனித உணவு படைப்பது, .தெய்வத்தை விருந்தினரை உபசரிப்பது போல
மரியாதையை கொடுத்து வணங்குவது.


    வேதம் - வேதத்தின் இறுதிப் பயன் வேதாந்தம், வைதிகக் கர்மத்தின் பயன் ஞானம்.
ஞானத்தின் மூலமே சாகா நிலை முக்தி எய்தலாம் எனபது.
    ஆகம் --ஆகம வழிபாட்டின் பயன் பக்தி.இடைவிடாமல் தெய்வத்தை நினைத்து வந்தால் சாகா நிலை அடையலாம். பக்தியுடன் சிலருக்கு யோஹம் அடுத்து ஞானம்
கிடைக்கும் என்பது.


    மாகா பாரத போரில் ஏற்பட்ட பெரும் உயீர் இழப்பு இந்திய மக்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. வேத கர்ம காண்டம் , இவ்வுலகிலும் சுவர்க்கத்திலும் கிடைக்கும் எனக் கூறிய கர்ம பலனாகிய புலன் உணர்ச்சி மீது மக்களுக்கு வெறுப்பு தோன்றியது.


      சாதாரண பெரும்பாலான ஏழை எளிய மக்கள் அரசனையும்,ஆசானையும், போற்றவும் வழிபடவும் ஆரம்பித்தனர். பாட்டு  கூத்து சடங்குகளுடன் தெய்வங்களுக்கு உணவு படைத்து வணங்கும் வழிபாட்டு முறை தோன்றியது.

பொருளாதாரம்........சேமிப்பு......

               பொருளாதாரம் என்பது உழைப்பு, உற்பத்தி, வணிகம், முதலீடு, சேமிப்பு, அடுத்து பகிர்ந்தளிப்பு.   வளரும் நாடுகளில் உழைப்பு இருக்கும் அனால்  பகிர்ந்தளிப்பு இருக்காது. அதற்கு போதுமான கல்வி, விழிப்புணர்வு இல்லாமையே முக்கிய காரணம்.


             நம்முடைய பார்வை, உழைக்கும் மக்களை சேமிப்பு பழக்கத்திற்கு கொண்டு வருவது. . விலைவாசி அதிகமாக இருப்பதால் சேமிப்பு என்பது மிகக் குறைவாகத்தான் இருக்கும்.அல்லது இருக்காது.  இருந்தாலும் அதற்க்கான விழிப்புணர்வு கொடுத்து சேமிக்கச் செய்ய வேண்டும். மனிதனின் அத்தியாவசிய ( உணவு, உடை, குடியிருப்பு ) தேவைகள் போக கேளிக்கைகள் மது, சூது போன்றவற்றில் செலவு செய்யக்கூடாது.
எளிய மருத்துவம், வாழ்க்கை கல்வி போன்றவற்றில் செலவு செய்ய வேண்டும். ஆடம்பர வாழ்க்கை, நுகர்வோர் பொருட்களுக்கு தன்னுடைய சேமிப்பு வளரும் வரை போகக் கூடாது.
  
       சேமிப்பு என்பது மனிதனின் மிகப் பெரிய பொருளாதார விழிப்புணர்வு. தமிழர்களின் பண்பாட்டில்  சேமிப்பு என்பது பரம்பரையனவை தான். வெள்ளையர்கள் இந்தியா, தமிழ் நாடு வந்தபின் மாறிய கலாசாரத்தில், சேமிப்பு பண்பாடும் மாறி நுகர்வோர்
கலாச்சரத்திற்ககுத்  தள்ளப் பட்டு விட்டது.


       தமிழர்கள் விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்த்து பொருளாதார வளர்ச்சி  அடைந்தனர். அதில் கிடைத்த உபரி வருமானத்தை அல்லது இலாபாத்தை சேமித்து  
விவசாய நிலம் மற்றும் தங்கம் முதலியவற்றில் முதலீடு செய்தனர்.


      காலம் மாற தொழில் புரட்சி ஏற்பட்டு விவசாய நிலங்கள் தொழில்சாலைகள் ஆனது.
சாதாரண குடியருப்புகள் கான்கீரீட் வீடுகள் ஆனது. கைவினைக் கலைஞர்கள் தொழில் சார்ந்த வேலைகளுக்கு சென்றனர். படித்தவர்கள் தொழிட்சாலை நிர்வாகத்திற்கு இடம் பெயர்ந்தனர். நுகர்வோர் பொருட்கள் சந்தைக்கு வரத்தொடங்கின. தவணை முறையில் தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு கடன்காரர்கள் ஆக்கப்பட்டனர். சேமிப்பு பழக்கம் இல்லாமல் போனது.
    
        விவசாயம் செய்து வந்தவர்களுக்கு வருடம் முழுவது வேலை கிடைப்பதில்லை. . இயற்க்கை சீற்றம் வேறு அவர்கள் உற்பத்தியை குறைத்தது. இல்லாமலும் செய்தது. குடும்பம் பெருக்கத்தால் நிலங்களும் துண்டு துண்டாக்கப் பட்டு வருமானம் போதிய அளவுக்கு இல்லாமல் போனது. இதனால் இவர்களின் சேமிப்பும் இல்லாமல் ஆனது.


     இத்தனைக்கு இடையிலும் உலக நாடுகளில் இந்தியாவின் சேமிப்பு அதிகம் தான்.
அப்படியானால் விழிப்புணர்வு உள்ளவர்கள் சேமிக்கத்தான் செய்கிறார்கள். அடுத்தவர்களைப் பார்த்து தானும் அது போல்ஆடம்பர வாழ்க்கை  வாழ விரும்புபவர்கள் தான் சிரமப்படுகிறார்கள். வரவு அறிந்து செலவு செய்பவர்கள் வெற்றி பெற்று விடுகின்றனர்.


     அதனால் சேமிப்பு மிக மிக அவசியம். சேமித்த பணத்தை நல்ல இடத்தில்  முதலீடு செய்வது அடுத்த நடவடிக்கை. இரண்டுக்கும் விழிப்புணர்வு தேவை.


    


          
    

கல்வி பொருளாதார விழிப்புணர்வு .........

January 16, 2011

                 மனித வாழ்க்கையில் கல்வி பொருளாதார விழிப்புணர்வு என்பது மிக மிக முக்கியம்.  கல்வி என்பது உணர்வில் இருந்து மாறுபட்டது. உணர்வு எல்லா உயர்களுக்கும் பொதுவானது. கல்வி என்பது சூழ்நிலைகளுக்கு ஏற்றப படிப்பது, தெரிந்து, கொள்வது, .பயன்படுத்துவது.
             இந்தியாவை பொறுத்தவரை 17 ஆம் நூற்றாண்டு வரை முகலாயர்கள் ஆட்சி செய்தார்கள். உயர் சதிக்கரர்களைத் தவிர  பொதுவாக கிராம விவசாய மக்களுக்கு கல்வி என்பது எட்டாத கனி. இந்தியா விவசாய நாடக இருப்பதால் மண், நிலம், நீர், கால்நடைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இருந்ததே ஒழிய ( இவைகள்  எல்லாம் உணர்வு மற்றும்  அனுபவம் சம்பதம் ஆனவை.  ) புதிய செய்தகள், உலக மாற்றங்கள்,
தத்துவங்கள் படிக்கவோ தெரிந்து கொள்ளவோ வாய்ப்பில்லாமல் இருந்தது.
           17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியா வந்த போது இதை கவனித்தார்கள். இந்திய மக்களை நிறத்தாலும் தோற்றத்தாலும் இந்தியர்களாக இருந்தாலும் சிந்தனையாலும் செயலாலும் ஆங்கிலேயர்களாக மாற்றத் திட்டமிட்டனர். மதகுரூக்கள் உளவியல் நிபுணர்கள் கல்வியாளர்களை இங்கிலாந்திலிருந்து தரூவித்து உளவியல் மற்றும் கல்வியால் இந்திரயர்களின் சிந்தனையை மாற்றினார்கள். அப்போது கல்வி என்பது ஆங்கிலவழி ஆக கற்றுக்கொடுக்கப்பட்டது.
         அப்போதும் உயர் சாதிக்காரர்களால் மட்டும் ஆங்கில வழி கல்வியை விரைவாக கல்வியைக் கற்க முடிந்தது. மற்றவர்களுக்கு கல்வி போய்  சேரவில்லை. இதை ஆங்கிலேயர்களும் உணர்ந்து அவரவர் தாய் மொழியிலும் கல்வி கற்காலம் என்று சட்டம் போட்டனர். ஆனாலும் ஆட்சி மொழி ஆங்கிலம் இருந்ததால் தாய் மொழியில்  கற்றவர்களுக்கு பெரிய நல்ல அதிகாரம் உள்ள  வேலை வாய்ப்புக்  கிடைக்கவில்லை.
         அதோடு பள்ளிகளிலும் ஆங்கிலம் ஒரு படமாக இருந்ததால் ஆங்கிலம் படிக்கவராத அடித்தட்டு மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியிலே நிறுத்திக்கொண்டனர். அதனால் கல்வி தொடர முடியவில்லை. இது சுதந்திரம் கிடைத்த பின்னும் இன்றும் தொடர்ந்து கொண்டுள்ளது.
        பள்ளிப்படிப்பை பாதயில்  நிருதியவர்களைக கேட்டால் ஆங்கிலம் சரியாக படிகக  வரவில்லை. ஆசிரியர் திட்டுகிறார். அதனால் பள்ளி செல்லமாட்டேன் என்று கூறுவதைக் கேட்கலாம். பள்ளி போவதைவிட சிரமமான கூலி வேலைக்குக் கூட போக தயாராக இருக்கும் மாணவன் படிக்க மாட்டேன் என்று கூறுவது ஆங்கில பாடத்தை
எதிரியாக  பார்த்து அது தனக்கு முடியாது என்கின்ற எண்ணம் தான்.
      இதனால் இந்திய பெரும்பாலான கிராமப்புற தமிழ் மாணவர்கள் கல்வி கற்பதை நிறுத்திவிட்டு விவசாயத்தின் மாற்று வேலையன கூலி வேலை ஓட்டுனர், கட்டிட தொழில் என்று கல்விசாரத உடல் உழைப்பு சர்ர்ந்த தொழிலில் தன்னை ஈடுபடுத்திகொண்டனர்.
       கிராம மக்களை கல்வி சென்றடையமைக்கு இது ஒரு முக்கிய  காரணம். அதோடு பெண் கல்வி பற்றிய விழிப்புணர்வு இல்லாமை பெண்களை கல்வி கற்கவிடாமல் செய்திருந்தது.

கல்வி இல்லாததால் பொருளாதாரத்திலும் பெரிய முன்னேற்றம் காணமுடியவில்லை.

     தாய் மொழயில் கற்பதும் சிந்திப்பதும் தான் முன்னேற்றதை  தரும். தாய் மொழியில் கற்பதை குறைவாக எண்ண வேண்டாம்.. ஆங்கிலம் படிக்க முடிந்தவர்கள் படிக்கலாம். ஆங்கிலம் படிக்க முடியாதவர்களை வகுப்பு ஆசிரியர்களும் கேவலமாக திட்டக்கூடாது. 
ஜெர்மனி, பிரான்சு, சீனா, ஜப்பான், ரஷ்யா, போன்ற நாடுகள் ஆங்கிலம் மூலன் வல்லரசு ஆகவில்லை. நோபல் பரிசு பெற்ற பல மேதைகளுக்கு ஆங்கிலம் தெரியாது. 

பிரச்சனைகள் ... .... ....

January 15, 2011

        பிரச்சனைகள் என்பது பொதுவானவை. எல்லா உயிர்களும் பிரச்சனைகளை எதிர் கொள்கின்றன. முடிந்தவை சமாளிக்கும். முடியாவிட்டால் ஓடிவிடும். மனிதன் மட்டும் கடைசி வரை போராடுவான். தோற்றால் கூட  மறுபடி முயற்சிப்பான். பிரச்ச்னைகளுக்கு தீர்வு காணும் வரை முயற்சிப்பான்.


   மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள மிகப்  பெரிய வித்தியாசமே போராடுவது, தீர்வு காண்பது, வெற்றிபெறுவது தான்.

மந்தை உணர்வு.....

   மனிதன் மந்தயுணர்வு உள்ளவன். கூடி வாழ்வதையே  விரும்புபவன். முதலில் அவனுக்கு தேவைப்படுவது பாதுகாப்பு. அதற்கு அவனுக்கு கூட்டம் அவசியமாகிறது. .   அடுத்து அவனுடைய உணர்வுகளின் வெளிப்பாடு. அதற்க்கு எதிர் பால் ஆண் பெண் உறவு தேவை. அப்படியானால் தனி மனிதனாக வாழ முடியாது.  விரும்புவதுவும் இல்லை  நாகரிகம்  வளர வளர  மனிதனுக்கு மேலும் உறவுகள் தேவைப்படுகிறது.


        அதோடு மனிதன் சுயநலமிக்கவன். தனக்கு ஏதாவது பயன் கிடைத்தால் தான் மற்றவர்களுக்கு உதவுவான். ஒவ்வருக்கும் ஒரு திறமை , ஒரு ஆற்றல் இருக்கும். அதை மற்றவர்களுக்கு பயன் படித்ததினால் அவர்களும் மற்றவர்களுக்கு உதவ முன்
வருவார்கள்.

    

அறிவு என்பது ...........

      அறிவு என்பது தமிழர்களைப் பொறுத்தவரை


       எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள்
       மெய் பொருள் காண்பது அறிவு.


      தொட்டனைதூரும் மணற்கேணி மாந்தருக்கு
       கற்றனைதூரும் அறிவு.        
  
        யார் எது  சொன்னாலும் அது உண்மைதானா என்று கண்டறிய
தேவைப்படுவது அறிவு.
    
        அதேப்போல பல செய்திகள் கற்றிருந்தால் தான் அறிவு வளரும்.   எதை சொன்னாலும் நம்புவதற்கும் நமக்கும் பல செய்திகள் தெரிந்து இருப்பதற்கும் நாம் கற்க வேண்டும்.

      அப்படியானால் அறிவு என்பது இயற்கையான உணர்வு அல்ல. சூழ்நிலைகளால் மனிதன் கற்பது தனக்கு தேவையனவற்றை ஏற்ப்பது அறிவாகிறது.


        அறிவு என்பது ஐம்புலன் அனுபவ எல்லைக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். இம்புலத்திற்க்கும் புற உலகப் பொருட்களுக்கும் இடையே ஏற்படும் உறவின் விளைவாக அறிவு உருவாகிறது. 

ஆறு உணர்வுகள்

January 13, 2011

           மனிதனுக்கு ஆறு அறிவு என்று சொல்கிறோம். ஐந்து புலன்களின் அறிவு ஐந்து   என்றும் பகுத்தறிவு ஆறாம் அறிவு என்பதும்  வழக்கு. ஐந்து  அறிவு என்பது ஐந்து  புலன்களின உணர்வு. உணர்வுகளை பிரித்துப்  பார்த்து உணர்வது பகுத்தறிவு.

         அப்படியானால் ஆறு உணர்வுகளையும் ஆறு உணர்வுகள்  என்று ஏன் சொல்லக்கூடாது ?
         உணர்வு என்பது தன்னால் இயற்க்கையாக  இயங்குவது. அது உள்ளுணர்வு. யாரும்   சொல்லிகொடுத்து செய்வதில்லை. பிறந்த கன்று  தாயைத தேடி ஓடுவதும் பால் குடிப்பதும இயற்க்கை. அது அறிவாகாது. உணர்வு.


      அறிவு என்பது எப்பொருள் யார் யார் வாய் கேர்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு.  மெய்ப் பொருள் காண்பது எப்போது ? உணர்வுகளின் அனுபவமும் மற்றவர்களிடம்  பார்ப்பதும்  கேட்பதுவும் மனிதனுக்கு ஒரு பாடத்தைக் கற்றுத் தருகிறது  தனக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முன்னேறுவதை மனிதன் விரும்புகிறான். அவற்றைப் பற்றிக்கொள்கிறான். அது அறிவு.  அதையும்  விழ்ப்புணர்வு என்றும் சொல்லலாம்.


       கற்கால மனிதன் இப்படித்தான் நாகரிக மனிதனாக மாறி இருப்பான். கற்கால மனிதன் உணர்வுகளால் உந்தப்பட்டு செயல் பட்டான். அதில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு
காணும் நோக்கில் தன்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டான்.


     அப்படியானால் மனிதனின் அடிப்படையானது உணர்வுகள் தான். அறிவு இல்லை. உணர்வு கொண்டு தான் இயங்குகிறான்.


    பொதுவான அனைத்து உயிர்களின் உணர்வுகள் --  புலன் உணர்வுகள் பார்த்தல்,கேட்டல்,நுகர்தல், சுவைத்தல், போக முதலில் பசி உணர்வு. அடுத்து பாதுகாப்பு உணர்வு, இச்சை உணர்வு.     பிரசனைகள் வரும் போது பய உணர்வு, பின் எச்சரிக்கை உணர்வு இப்படி உயரினங்கள் வாழத் தொடங்குகிறது.


  மனிதன் மட்டும் விழிப்புணர்வு கொண்டு இயங்குகிறான். முதலில் பார்த்து கேட்டு தெரிந்து கொள்கிறான். கண்டதையும் பார்த்ததையும் மனதில் பதித்து வைத்துக் கொண்டு எச்சரிக்கையாக அடுத்த நடவடிக்கைள் செய்கிறான்.




  
 
Related Posts Plugin for WordPress, Blogger...

Lorem

அம்பேத்கர்...... (1) அறம் செய்ய விரும்பு ..... (1) அறியாமை (1) அறிவு என்பது ....... (1) அலட்சியம் (1) ஆறு உணர்வுகள் (1) ஆளுமை --- நேரம் .......... (1) இந்துக்கள் .......... (1) உணர்ச்சிவயம் ...... (1) எம்மைப் பற்றி ................. (1) கல்வி பொருளாதார விழிப்புணர்வு .. (1) காந்தி (1) சட்டம் .... .விதிகள் .... (1) தாழ்வு (1) தீதும் நன்றும் ....... (1) நம்மைப் பற்றி......நம் கருத்தைப் பற்றி... (1) நான்கு வகை ஆற்றல் மனிதர்கள் ...... (1) நேரு (1) பணக்கார ஏழை இந்து தெய்வங்கள் -------- (1) பணிவு (1) பருவம்.......... (1) பலகீனமானவர்கள் .... (1) பிரச்சனைகள் ... .... . (1) புகைப்படம் (1) பொருளாதாரம்........சேமிப்பு.. (1) மந்தை உணர்வு.... (1) மனது ....... (1) முயற்சி .....பயிற்சி.. பழக்கம் ..வழக்கம் ...அனிச்சை செயல் .. (1) மூன்று வகை உழைப்பு..... (1) மொழி ...... .. (1) விவசாயிகள் .......... (1) வீண் முயற்சி ....... விடா முயற்சி........... (1) வேத சடங்கு -- ஆகம வழிபடு. (1)

Ipsum

அம்பேத்கர்...... (1) அறம் செய்ய விரும்பு ..... (1) அறியாமை (1) அறிவு என்பது ....... (1) அலட்சியம் (1) ஆறு உணர்வுகள் (1) ஆளுமை --- நேரம் .......... (1) இந்துக்கள் .......... (1) உணர்ச்சிவயம் ...... (1) எம்மைப் பற்றி ................. (1) கல்வி பொருளாதார விழிப்புணர்வு .. (1) காந்தி (1) சட்டம் .... .விதிகள் .... (1) தாழ்வு (1) தீதும் நன்றும் ....... (1) நம்மைப் பற்றி......நம் கருத்தைப் பற்றி... (1) நான்கு வகை ஆற்றல் மனிதர்கள் ...... (1) நேரு (1) பணக்கார ஏழை இந்து தெய்வங்கள் -------- (1) பணிவு (1) பருவம்.......... (1) பலகீனமானவர்கள் .... (1) பிரச்சனைகள் ... .... . (1) புகைப்படம் (1) பொருளாதாரம்........சேமிப்பு.. (1) மந்தை உணர்வு.... (1) மனது ....... (1) முயற்சி .....பயிற்சி.. பழக்கம் ..வழக்கம் ...அனிச்சை செயல் .. (1) மூன்று வகை உழைப்பு..... (1) மொழி ...... .. (1) விவசாயிகள் .......... (1) வீண் முயற்சி ....... விடா முயற்சி........... (1) வேத சடங்கு -- ஆகம வழிபடு. (1)

ContactMe

wibiya widget

Dolor

அம்பேத்கர்...... (1) அறம் செய்ய விரும்பு ..... (1) அறியாமை (1) அறிவு என்பது ....... (1) அலட்சியம் (1) ஆறு உணர்வுகள் (1) ஆளுமை --- நேரம் .......... (1) இந்துக்கள் .......... (1) உணர்ச்சிவயம் ...... (1) எம்மைப் பற்றி ................. (1) கல்வி பொருளாதார விழிப்புணர்வு .. (1) காந்தி (1) சட்டம் .... .விதிகள் .... (1) தாழ்வு (1) தீதும் நன்றும் ....... (1) நம்மைப் பற்றி......நம் கருத்தைப் பற்றி... (1) நான்கு வகை ஆற்றல் மனிதர்கள் ...... (1) நேரு (1) பணக்கார ஏழை இந்து தெய்வங்கள் -------- (1) பணிவு (1) பருவம்.......... (1) பலகீனமானவர்கள் .... (1) பிரச்சனைகள் ... .... . (1) புகைப்படம் (1) பொருளாதாரம்........சேமிப்பு.. (1) மந்தை உணர்வு.... (1) மனது ....... (1) முயற்சி .....பயிற்சி.. பழக்கம் ..வழக்கம் ...அனிச்சை செயல் .. (1) மூன்று வகை உழைப்பு..... (1) மொழி ...... .. (1) விவசாயிகள் .......... (1) வீண் முயற்சி ....... விடா முயற்சி........... (1) வேத சடங்கு -- ஆகம வழிபடு. (1)