ஐம்பெரும் பூதம் என்று தமிழர்களால் சொல்லப் படும் நீர், நிலம்,நெருப்பு,காற்று மற்றும் ஆகாயம் தான் உயிர்கள் உற்பத்தியாகவும் உயிர் வாழவும் இன்றியமையாதது.
நுண் உயிர்கள் ஒளி சேர்க்கை செய்யும் பொது ( நீர் + காற்று + சூரிய ஒளி ) பாசி இன தாவரம் உற்பத்தியாகிறது .இது தன் நிலை மாற்றம். பாசியின் விரிவாக்கம் தாவரங்கள்.
அது துளிர்விட்டு தண்டாகி, இலையாகி, அரும்பாகி, பூவாகி,காய் கனியாகி கனியில் இருந்து விதையாகிறது. விதை மண்ணில் விழுந்து மறுபடி செடியாகிறது. . நுண் உயிரிலிருந்து கண்ணுக்கு புலப்படும் செடி கொடி உருவானது. தாவரத்தின் ஓவ்வொரு பகுதிவும் உயிர் அணுவோடு இருப்பதால் அதை பிடுங்கி வேறொரு இடத்தில் வைத்தாலும் அது துளிர் விட முடியும். தாவரங்களுக்கு உள்ள முதல் உணர்வு இப்படி இனப்பெருக்கம் செய்வது.
ஒரு செடியில் ஒரு இலை வறண்டு மற்ற இலை ஈரப் பதத்தோடு இருக்கும் போது வறண்ட இலை தன்னைத் தானே சுருடிக் கொண்டு பக்கத்தில்
உள்ள இலையின் நீரை உறிஞ்சும். உயிர் வாழ இலை செய்யும் இரண்டாம்
நிலை. அது உறிஞ்சும் பகுதி வாயாகி சுருள் புழுவாகிறது . இரண்டாம் .உணர்வு
அதே போல தரையில் கிடக்கும் விதைகள் போதிய நீர் ஒளி கிடைக்காமல் துளிர் விட முடியாமல் விதையின் உள்ளேயே புழுவாகி விடுகிறது. அரிசி, பருப்பு, கோதுமை போன்ற பொருட்களை கற்று புகாமல் மூடி வைத்திருந்தால் புழு உண்டாவதை பார்த்திருப்போம்.
.