Pages

Popular Posts

மனது ........

January 31, 2011

       மனது ஓர் பூதக் கண்ணாடி போன்றது.
      எதை நினைக்கிறோமோ அதை பன்மடங்கு பெருக்கி காட்டும். மகிழ்ச்சியாக நினைத்தால் மகிழ்ச்சி பன்மடங்கு தெரியும். வருத்தமாக நினைத்தால் பல மடங்கு வருத்தம் தெரியும்.  அதேபோல பயமாக நினைத்தால்  மனது முழுவதும் பயம் தொற்றிக் கொள்ளும்.


    மன நிறைவு தான் மகிழ்ச்சி சுரங்கம். 

பலகீனமானவர்கள் .........

January 27, 2011

     உலகில் பலர் பலகீனமானவர்களாகத் தான் இருக்கிறார்கள். வலுவானவர்கள் பலகீன மானவர்களை அடக்கி ஒடுக்கி அடிமைப் படுத்துகின்றனர்.
பலகீனமானது இருப்பிடம் - மனது, உடம்பு, பொருளாதாரம், கல்வி -- இவை
                                                  முக்கியமானவை .
1 . மனது.  -   உள்ளத்தால் பலகீன மானவர்கள்
                       எதிரிகளின் அச்சுறுத்தல், பயந்த மன நிலை, கூச்ச சுபாவம்,
                       தாழ்வு மனப்பான்மை, தனக்கு பல தகவல்கள் தெரியவில்லை என்று
                                                                  தன்னிடம் பல தகுதிகள் இல்லை என்ற எண்ணம்,
2 . உடல்  -- உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள்,
                    பாலினம் .  ஆண், பெண்
                    மாற்றுத் திறனாளிகள் -  (ஊனமுற்றோர் )
3 . பொருளாதாரம் -- சரியான வேலை வாய்ப்பு இல்லாமை,
                                      உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமை,
                                      பெரிய குடும்ப சுமை,
                                      வரவு  செலவு அறியாமை,
                                      தவறான முதலீடு,
                                      தவறான குணநலன்கள், கேளிக்கை, ஆடம்பரம்
4 . கல்வி --  கல்வி கற்க வாய்ப்பு இல்லாமை,
                      கற்றதை நினைவில் கொள்ளும் ஆற்றல் இல்லாமை,
                      பயிற்சி, இயற்கையான திறமை இல்லாமை,
                      சூழ்நிலை -   சேர்க்கை, இருப்பிடம்,


இவை நான்கிலும் விழிப்புணர்வு தேவை. 

இந்துக்கள் ...............

January 22, 2011

    இந்தியா பெரும்பான்மையான இந்து மக்கள் கொண்ட நாடு என்று சொல்லப்படுகிறது.   ஒரு மளிகைக் கடையில் எல்லா சாமான்களும் கிடைக்கும். ஆனால் மளிகை மட்டும் கிடைக்காது. அது போல இந்து சமூகத்தில், ஆயிரத்துக்கும்  மேற்பட்ட சாதிகள் உள்ள  அமைப்பில் இந்து என்று எவரும் கிடையாது. சாதிகள் என்ற செங்கற்களால் கட்டப்பட்டது தான் இந்து சமூகம். அது பல்வேறு சாதியல் பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவை அனைத்தையும் ஒருங்கினைத்து இந்து பண்பாடாக மாற்றவே இந்து மத வாதிகள் முயல்கின்றனர்.


        உதாரணம் --  வேதங்களை நம்புபவர்கள் , நம்பாதவர், இயற்கையை வணங்குபவர், இறந்த்வர்கள், சமூகத்திற்காக உயீர் நீத்தவர், தியாகம் செய்தவர், ஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்கள்,  இடங்கை, வலங்கை பிரிவினர், நாமம் போட்டவர் விபூதி பூசியவர்
என்று முரண்பாட்டு தெய்வங்கள் வழி பாட்டு முறைகள் உள்ளன.


      பெரும் தெய்வங்கள், சிறு தெய்வங்கள், கிராம தெய்வங்கள், குடும்ப தெய்வங்கள் இப்படியும் பல தெய்வங்கள் தெய்வ நம்பிக்கைகள், சடங்குகள் உள்ளன. 

மூன்று வகை உழைப்பு........

January 21, 2011

        உழைப்பை அகம், புறம் என்று பிரிப்போம். . வெளியல் தெரியாமல் உழைப்பது அகம். தெரிந்த்தது  உழைப்பது புறம். அறிவு வெளியில் தெரியாமல் செயல்படுவது. உடல்
உழைப்பு வெளியில்  தெரிந்தது செயல்படுவது. இவை இரண்டும் போக இரண்டையும் இணைத்து செயல் படுவது மனம். மனம் உற்சாகமாக இருந்தால் மட்டும் தான் அந்த உழைப்பு வெற்றி பெற்றதாக இருக்கும்.
    அப்படியானால் மனதை மூன்றாவது உழைப்பாக கொள்வோம்.
 
      அனுபவமுள்ளவர்கள், படித்தவர்கள் அறிவைக் கொண்டு செயல்படுவர்.
மற்றவரையும் தங்களுடைய ஆலோசனை படி  செயல்படச் செய்வர். இது அகச் செயல்.
   இரண்டாவது ரகம் உடல் உழைப்பை மட்டும் கொண்டு செயல் படுவது. உடல் உழைப்புக்கு எச்சரிக்கை உணர்வைத்தவிர வேறு  அதிக சிந்தனையோ, அறிவோ தேவையில்லை. சொன்னதைச்  செய்யவேண்டும். சொந்தமாகச்  செய்யத் தேவையில்லை. இவர்கள் மரபு வழி மாற்றங்களை பார்த்து அப்படியே செய்துகொள்வர். இது புறச் செயல்.
   மூன்றாவது பலருக்குப் புரியாத தெரியாத அக உழைப்பு -உள்ளம், மனது. உழைக்கும் போது மனதில் உறுதி வேண்டும் என்று சொல்லுவது இந்த மனது சார்ந்த உழைப்பைத் தான்  .உழைக்கும் போது மனதில் சலிப்பு ஏற்படாமல் உறுதியுடன் உழைப்பது.
  மனம், உள்ளம் வலிமையாக இருக்க சூழ்நிலைகள் முக்கிய காரணம். உடல் பலம், பண பலம், சாதி மத பலம், அதிகார பலம், சேர்க்கை கூட பலம் தான். இவைகள் மனிதனுக்கு அறிவை விட உற்சாகத்தைக் கொடுக்கிறது. உறுதியான மனம் கொண்டவன் வெற்றிக்கு மேல் வெற்றி கொள்கிறான்.

    உதாரணங்கள் : உடல் உழைப்பு - விவசாயர்கள் ,கைவினைக் கலைஞர்கள்
                        அறிவியல் உழைப்பு - விஞ்ஞானி, மருத்துவர், சட்டவல்லுநர்,
                         உள்ளம், மனது உழைப்பு -போர்வீரர்கள் ,அரசர்கள் மந்திரி அரசியல்வாதிகள்


பணக்கார ஏழை இந்து தெய்வங்கள் ------------

    சிலர் இந்து நாடு என்று சொல்லுகிற இந்தியாவில் மக்களிடம் சகோதரத்துவமும் இல்லை. பொருளாதார சமத்துவமும் இல்லை.மக்களிடம் மட்டும் எனபது இல்லை, கடவுளர்களிடமும் சமத்துவம் இல்லை.
  இந்து  தெய்வங்கள் பெரும் தெய்வம் சிறு தெய்வம் என்று முதலில் பிரிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் மக்கள் பெரு தெய்வ நம்பிக்கை கொண்டுள்ளனர். அடித்தட்டு மாக்கள் என்று அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் சிறு தெய்வங்களை வழிபடுகின்றனர். இவர்கள் பெரும் தெய்வங்களையும் வழிபடுவது உண்டு. சுதந்திரத்திற்கு முன் இவர்களை வழிபட அதாவது கோவில் உள் கூட விடாத நிலை இருந்தது.
    சிவன், பெருமாள் அல்லது கிருஷ்ணன் சக்தி அல்லது அதற்கு ஈடான பெண் தெய்வம் பெரும் தெய்வங்களாக சித்தரிக்கப் பட்டிருந்தது. இத் தெய்வங்களுக்கு மன்னர்கள் உதவியுடன் பெரிய கோவில்கள் கட்டப்பட்டன. ஏழை எளிய மக்களின் வரிப் பணம் மற்றும் ஊழியம் (கூலி வாங்காமல் வேலை செய்வது .)  மூல பெரிய கோவில்கள் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் என்று ஓன்று செய்துவிட்டு கட்டியவர்களையே உள்ளே விடுவதில்லை.
   சிறு தெய்வங்கள் என்பது பொதுவாக காவல் தெய்வங்கள். இந்தியா தமிழக மக்கள் பெரும்பாலும் விவசாயத்தியே தொழிலாகக் கொண்டவர்கள். அத்னால் இயற்க்கை ஓடு ஒன்றி இணைந்து வாழ்ந்தனர். விவசாயம், மற்றும் கால் நடைகள் பாதுகாப்பாக இருக்க அவர்களுக்கு இயற்க்கை சார்ந்த நபிக்கைகள் தான் இருந்தனவே ஒழிய வேத மந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை. தங்கள் துன்பம் போக்கிக் கொள்ளவும், மகிழ்ச்சி மற்றும் வழமை பெறவும் இச் சிருதெய்வங்களையே நம்பி வணங்கினர். அது மரமாகவோ,கல்லாகவோ, மண்வைத்து கட்டப் பட்ட பீடமாகவோ இருந்தது. இவற்றை அடித்தட்டு மக்கள் வணங்கி வந்தனர்.

   

மொழி ...... ......

January 20, 2011

        நீண்ட நெடும் காலமாக மொழியை ஒரு கருவியாக மக்கள் சித்தரித்து வந்தனர்.

    பேச்சி மொழி, இலக்கிய மொழி, நாடக மொழி, வட்டார மொழி என வித்தியாசங்கள் உண்டு. தங்கள் எண்ணங்களை வெளி இடவும் பிறர் எண்ணங்களை கருத்துக்களை புரிந்து கொள்ளவும் மொழி ஒரு  க்ருவியாகப  பயன்பட்டது. 
  
      மேலோட்டமாக பார்த்தல் மொழி ஒரு கருத்தை வெளிப்படுத்தும்.சைகைகள், 
பாவனைகள், உருவம் ,வடிவம், அமைப்பு, சமிக்கைகள், கோடுகள்,  வண்ணம் கூட மொழி அர்த்தத்தில் கையாளப்பட்டன.  

       சமூகம் மொழியின் வாயிலாகவே இயங்குகிறது. தான் இருத்தலை 
வெளிப்படுத்துகிறது. சமூக நடவடிக்கைகள் நடைபெறுகின்றன . முத்லில் பெற்றோர் 
குழந்தைகள் உறவில் ஆரம்பித்து ஆசிரியர் மாணவன், மதகுரு சடங்குகள், அரசின் சட்டங்கள் அதிகாரங்கள், செயல்பாடுகள், நீதிமன்ற நடவடிக்கைகள் நிர்வாக பணிகள் இப்படி அனைத்து சமூக பணிகளும் மொழியின் மூலமாகவே செயல் படுகின்றன. 
அப்படியானால் மொழி இல்லையேல் சமூகம் இல்லை. சமூகம் இல்லையேல் மொழி இல்லை. 

     வளர்ச்சி போக்கில மக்கள், சமூகம், தேசிய இனம், தேசியங்கள் என பரிணாமித்தது .மொழியே தேசத்தை, இனத்தை அடையாளப் படுத்தியது.   பிரஞ்சி, ஜெர்மன், சைனா இப்படி பிரஞ்சி பேசுபவர்கள் பிரஞ்சி தேசம், ஜெர்மன் பேசுபவர்கள் ஜெர்மன் தேசம், சீனம் பேசுபவர்கள் சீன தேசம், ஜப்பான் இப்படி மொழி வாரியாக தேசம் அடையாளப் படுத்தப்பட்டுகிறது.

  ஒரு நாடு மற்ற நாட்டடை பிடித்தாலோ ஏதோ ஒரு வகையில் அடிமைப்படுத்த நினைத்தாலோ  முதலில் அந்த நாட்டின் மொழியை பின்னுக்குத் தள்ளிவிட்டு தன்னுடைய மொழியை முன்னிருத்தும்.  ஆட்சி மொழி, அதிகார மொழி, கல்வி மொழி நீதிமன்ற மொழி இப்படி முக்கியமான நிகழ்வுகளிளெல்லாம் அந்நிய மொழியை  பயன்படுத்த ஆரம்பிக்கும். சமூக மொழி தானாக பின்னுக்குப் போய்விடும்.

     தங்களுடைய நலனுக்கு ஏற்ப கருத்தாக்கங்கள் இலக்கியங்கள் செய்திகள் என்று அந்நிய மொழி தாராளமாக அடிமைப்படுத்த நாட்டில் புழக்கத்தில் வந்து மக்கள் செய்திகள் எல்லாம் அநிநிய செய்த்களாக மாறுகின்றன. அந்நிய  மொழி படித்தால் தான் அரசு வேலை என்கின்ற நிலை கூட வந்துவிடும். இப்படியே அந்நிய மொழி நிலைநாட்டப் படும்.

      இப்படித்தான் தேசிய மொழியாக இருந்த தமிழ் மொழி ஆங்கில ஆட்சியல் பின்னுக்குத் தள்ளப் பட்டது. ஆங்கிலேயர் சென்றபின்னும் கூட பல மொழிக்ழ்ளைக் கொண்ட இந்தியாவில் டெல்லி அதிகாரத்தை வைத்துக் கொண்டதால் ஆங்கிலம் தவிர்க்க முடியாத மொழியாகி விட்டது.

     

சட்டம் .... .விதிகள் .....

January 17, 2011

       மக்களின் வாழ்க்கை முறையை நிலை நிறுத்த விதிகள் தேவைப்பட்டன.
திருச்சபைகள், மதக் குருக்கள் விதிகளை முதலில் வகுத்தனர். பிறகு சமூகக் குழுக்கள்  வர்க்கங்கள் அடுத்து தொழில் சங்கங்கள் தங்கள் தங்களுக்கென்று ஒரு சமூக நடத்தையை அமைத்துக் கொண்டன. இவற்றை தங்கள் கட்டளைகள் ஆணைகள் கொண்டு நடைமுறைப் படுத்துகின்றன.


     சட்டம் என்பது அடிப்படையல் ஒரு கட்டாயப் படுத்தும் முறை தான். சமூகத்தில் விரும்பப் படுகின்ற சில நிலைமைகளை நிலை நாட்ட சட்டம் தேவைப் படுகின்றது.


     நவீன காலத்தில் பாராளுமன்றம் தவிர்த்து நீதி மன்றங்கள் தன்னுடைய தீர்ப்புகள்
மூலம் சட்டம் இயற்றும் அங்கமாக உருவாகி வருகிறன.


    சட்டம் அரசின் படைப்பாக இருப்பினும் பெரும்பான்மையான மக்கள் அவற்றை தங்கள்
விருப்பம் போல் மாற்றிக் கொள்ளவோ , அப்படியே ஏற்றுக் கொள்ளவோ முடியாது.
 'அதில் அரசியல் அமைப்புக்கு உட்பட்ட ' என்று சேர்த்துக் கொள்ளப்பட்டு நாட்டின் இறையண்ண்மையை காத்துக் கொள்கிறது.


    இதற்கு எடுத்துக் காட்டு - இந்திய தனியார் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதர்க்கு
சிலர் எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். .
  

காந்தி, நேரு, அம்பேத்கர்.......

                  இந்தியாவை உருவாக்கியவர்கள் காந்தி, நேரு, அம்பேத்கர் .


   காந்தி -- அரசியலிலும் சமூகத்திலும் விடுதலை வேண்டும். இந்தியா பெரும்பாலும்
                  கிராமங்களால் ஆனதால் கிராமங்கள் வளர வேண்டும். ஓன்று படவே முடியாத
                  பல குணம் கொள்கை தெய்வ நம்பிக்கை கொண்ட இந்தியர்களை ஒரு  
                 அணியில்   இணைத்தவர். .


  நேரு --   சமூகம் பொருளாதாரம் வளர வேண்டும். தொழில் துறை முன்னேற
                 வேண்டும்.
                 மக்கள் வரிப்  பணத்தில் பொதுதுரை முதலீடு. -  விவசாயம் முன்னேற்றம்.
                பசுமைப் புரட்சி,


 அம்பேத்கர் --  சாதி பேத மற்ற சமுத்துவ சமுதாயம்.  அடிமை வாழ்வு ஒழிப்பு. பெண்கள்
                          தொழிலாளர்கள் முன்னேற்றம்.
                          பொருளாதாரம் அரசியலை விட சமூக மரியாதை.


                          ஏற்ற தாழ்வை விட உயர்வு தாழ்வு நீங்க வேண்டும்.


.

வேத சடங்கு -- ஆகம வழிபடு.

     இந்திய பண்பாட்டில் இந்து என்று சொல்லபடுபவர்கள் பல வழிப்பாட்டு முறைகளை கையாளுகிறார்கள்.
    சடங்குகளைப் பொறுத்தவரை ( வைதீக ) வேத சடங்குகள். இவை அக்கினி சடங்குகள். ஒவவொரு காரியத்திரக்கும் தீ உண்டாக்கி அக்னி வளர்த்து அதில் பொருள்களை அர்பணிக்க வேண்டும். தீயில் போடும் பொருட்கள் தெய்வத்தை சென்றடைகின்றன. தெய்வங்களின் வாய் அக்னி.
    ஆகம வழிபாட்டில் தீக்கு வேலை இல்லை. வழிபட்டு பொருட்களை தெய்வத்தின் முன் படைத்தது காட்டிவிட்டு தானே பயன்படுத்திக் கொள்ளலாம்.  தெய்வத்தை நீராட்டி அலங்கரித்து புனித உணவு படைப்பது, .தெய்வத்தை விருந்தினரை உபசரிப்பது போல
மரியாதையை கொடுத்து வணங்குவது.


    வேதம் - வேதத்தின் இறுதிப் பயன் வேதாந்தம், வைதிகக் கர்மத்தின் பயன் ஞானம்.
ஞானத்தின் மூலமே சாகா நிலை முக்தி எய்தலாம் எனபது.
    ஆகம் --ஆகம வழிபாட்டின் பயன் பக்தி.இடைவிடாமல் தெய்வத்தை நினைத்து வந்தால் சாகா நிலை அடையலாம். பக்தியுடன் சிலருக்கு யோஹம் அடுத்து ஞானம்
கிடைக்கும் என்பது.


    மாகா பாரத போரில் ஏற்பட்ட பெரும் உயீர் இழப்பு இந்திய மக்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. வேத கர்ம காண்டம் , இவ்வுலகிலும் சுவர்க்கத்திலும் கிடைக்கும் எனக் கூறிய கர்ம பலனாகிய புலன் உணர்ச்சி மீது மக்களுக்கு வெறுப்பு தோன்றியது.


      சாதாரண பெரும்பாலான ஏழை எளிய மக்கள் அரசனையும்,ஆசானையும், போற்றவும் வழிபடவும் ஆரம்பித்தனர். பாட்டு  கூத்து சடங்குகளுடன் தெய்வங்களுக்கு உணவு படைத்து வணங்கும் வழிபாட்டு முறை தோன்றியது.

பொருளாதாரம்........சேமிப்பு......

               பொருளாதாரம் என்பது உழைப்பு, உற்பத்தி, வணிகம், முதலீடு, சேமிப்பு, அடுத்து பகிர்ந்தளிப்பு.   வளரும் நாடுகளில் உழைப்பு இருக்கும் அனால்  பகிர்ந்தளிப்பு இருக்காது. அதற்கு போதுமான கல்வி, விழிப்புணர்வு இல்லாமையே முக்கிய காரணம்.


             நம்முடைய பார்வை, உழைக்கும் மக்களை சேமிப்பு பழக்கத்திற்கு கொண்டு வருவது. . விலைவாசி அதிகமாக இருப்பதால் சேமிப்பு என்பது மிகக் குறைவாகத்தான் இருக்கும்.அல்லது இருக்காது.  இருந்தாலும் அதற்க்கான விழிப்புணர்வு கொடுத்து சேமிக்கச் செய்ய வேண்டும். மனிதனின் அத்தியாவசிய ( உணவு, உடை, குடியிருப்பு ) தேவைகள் போக கேளிக்கைகள் மது, சூது போன்றவற்றில் செலவு செய்யக்கூடாது.
எளிய மருத்துவம், வாழ்க்கை கல்வி போன்றவற்றில் செலவு செய்ய வேண்டும். ஆடம்பர வாழ்க்கை, நுகர்வோர் பொருட்களுக்கு தன்னுடைய சேமிப்பு வளரும் வரை போகக் கூடாது.
  
       சேமிப்பு என்பது மனிதனின் மிகப் பெரிய பொருளாதார விழிப்புணர்வு. தமிழர்களின் பண்பாட்டில்  சேமிப்பு என்பது பரம்பரையனவை தான். வெள்ளையர்கள் இந்தியா, தமிழ் நாடு வந்தபின் மாறிய கலாசாரத்தில், சேமிப்பு பண்பாடும் மாறி நுகர்வோர்
கலாச்சரத்திற்ககுத்  தள்ளப் பட்டு விட்டது.


       தமிழர்கள் விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்த்து பொருளாதார வளர்ச்சி  அடைந்தனர். அதில் கிடைத்த உபரி வருமானத்தை அல்லது இலாபாத்தை சேமித்து  
விவசாய நிலம் மற்றும் தங்கம் முதலியவற்றில் முதலீடு செய்தனர்.


      காலம் மாற தொழில் புரட்சி ஏற்பட்டு விவசாய நிலங்கள் தொழில்சாலைகள் ஆனது.
சாதாரண குடியருப்புகள் கான்கீரீட் வீடுகள் ஆனது. கைவினைக் கலைஞர்கள் தொழில் சார்ந்த வேலைகளுக்கு சென்றனர். படித்தவர்கள் தொழிட்சாலை நிர்வாகத்திற்கு இடம் பெயர்ந்தனர். நுகர்வோர் பொருட்கள் சந்தைக்கு வரத்தொடங்கின. தவணை முறையில் தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு கடன்காரர்கள் ஆக்கப்பட்டனர். சேமிப்பு பழக்கம் இல்லாமல் போனது.
    
        விவசாயம் செய்து வந்தவர்களுக்கு வருடம் முழுவது வேலை கிடைப்பதில்லை. . இயற்க்கை சீற்றம் வேறு அவர்கள் உற்பத்தியை குறைத்தது. இல்லாமலும் செய்தது. குடும்பம் பெருக்கத்தால் நிலங்களும் துண்டு துண்டாக்கப் பட்டு வருமானம் போதிய அளவுக்கு இல்லாமல் போனது. இதனால் இவர்களின் சேமிப்பும் இல்லாமல் ஆனது.


     இத்தனைக்கு இடையிலும் உலக நாடுகளில் இந்தியாவின் சேமிப்பு அதிகம் தான்.
அப்படியானால் விழிப்புணர்வு உள்ளவர்கள் சேமிக்கத்தான் செய்கிறார்கள். அடுத்தவர்களைப் பார்த்து தானும் அது போல்ஆடம்பர வாழ்க்கை  வாழ விரும்புபவர்கள் தான் சிரமப்படுகிறார்கள். வரவு அறிந்து செலவு செய்பவர்கள் வெற்றி பெற்று விடுகின்றனர்.


     அதனால் சேமிப்பு மிக மிக அவசியம். சேமித்த பணத்தை நல்ல இடத்தில்  முதலீடு செய்வது அடுத்த நடவடிக்கை. இரண்டுக்கும் விழிப்புணர்வு தேவை.


    


          
    

கல்வி பொருளாதார விழிப்புணர்வு .........

January 16, 2011

                 மனித வாழ்க்கையில் கல்வி பொருளாதார விழிப்புணர்வு என்பது மிக மிக முக்கியம்.  கல்வி என்பது உணர்வில் இருந்து மாறுபட்டது. உணர்வு எல்லா உயர்களுக்கும் பொதுவானது. கல்வி என்பது சூழ்நிலைகளுக்கு ஏற்றப படிப்பது, தெரிந்து, கொள்வது, .பயன்படுத்துவது.
             இந்தியாவை பொறுத்தவரை 17 ஆம் நூற்றாண்டு வரை முகலாயர்கள் ஆட்சி செய்தார்கள். உயர் சதிக்கரர்களைத் தவிர  பொதுவாக கிராம விவசாய மக்களுக்கு கல்வி என்பது எட்டாத கனி. இந்தியா விவசாய நாடக இருப்பதால் மண், நிலம், நீர், கால்நடைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இருந்ததே ஒழிய ( இவைகள்  எல்லாம் உணர்வு மற்றும்  அனுபவம் சம்பதம் ஆனவை.  ) புதிய செய்தகள், உலக மாற்றங்கள்,
தத்துவங்கள் படிக்கவோ தெரிந்து கொள்ளவோ வாய்ப்பில்லாமல் இருந்தது.
           17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியா வந்த போது இதை கவனித்தார்கள். இந்திய மக்களை நிறத்தாலும் தோற்றத்தாலும் இந்தியர்களாக இருந்தாலும் சிந்தனையாலும் செயலாலும் ஆங்கிலேயர்களாக மாற்றத் திட்டமிட்டனர். மதகுரூக்கள் உளவியல் நிபுணர்கள் கல்வியாளர்களை இங்கிலாந்திலிருந்து தரூவித்து உளவியல் மற்றும் கல்வியால் இந்திரயர்களின் சிந்தனையை மாற்றினார்கள். அப்போது கல்வி என்பது ஆங்கிலவழி ஆக கற்றுக்கொடுக்கப்பட்டது.
         அப்போதும் உயர் சாதிக்காரர்களால் மட்டும் ஆங்கில வழி கல்வியை விரைவாக கல்வியைக் கற்க முடிந்தது. மற்றவர்களுக்கு கல்வி போய்  சேரவில்லை. இதை ஆங்கிலேயர்களும் உணர்ந்து அவரவர் தாய் மொழியிலும் கல்வி கற்காலம் என்று சட்டம் போட்டனர். ஆனாலும் ஆட்சி மொழி ஆங்கிலம் இருந்ததால் தாய் மொழியில்  கற்றவர்களுக்கு பெரிய நல்ல அதிகாரம் உள்ள  வேலை வாய்ப்புக்  கிடைக்கவில்லை.
         அதோடு பள்ளிகளிலும் ஆங்கிலம் ஒரு படமாக இருந்ததால் ஆங்கிலம் படிக்கவராத அடித்தட்டு மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியிலே நிறுத்திக்கொண்டனர். அதனால் கல்வி தொடர முடியவில்லை. இது சுதந்திரம் கிடைத்த பின்னும் இன்றும் தொடர்ந்து கொண்டுள்ளது.
        பள்ளிப்படிப்பை பாதயில்  நிருதியவர்களைக கேட்டால் ஆங்கிலம் சரியாக படிகக  வரவில்லை. ஆசிரியர் திட்டுகிறார். அதனால் பள்ளி செல்லமாட்டேன் என்று கூறுவதைக் கேட்கலாம். பள்ளி போவதைவிட சிரமமான கூலி வேலைக்குக் கூட போக தயாராக இருக்கும் மாணவன் படிக்க மாட்டேன் என்று கூறுவது ஆங்கில பாடத்தை
எதிரியாக  பார்த்து அது தனக்கு முடியாது என்கின்ற எண்ணம் தான்.
      இதனால் இந்திய பெரும்பாலான கிராமப்புற தமிழ் மாணவர்கள் கல்வி கற்பதை நிறுத்திவிட்டு விவசாயத்தின் மாற்று வேலையன கூலி வேலை ஓட்டுனர், கட்டிட தொழில் என்று கல்விசாரத உடல் உழைப்பு சர்ர்ந்த தொழிலில் தன்னை ஈடுபடுத்திகொண்டனர்.
       கிராம மக்களை கல்வி சென்றடையமைக்கு இது ஒரு முக்கிய  காரணம். அதோடு பெண் கல்வி பற்றிய விழிப்புணர்வு இல்லாமை பெண்களை கல்வி கற்கவிடாமல் செய்திருந்தது.

கல்வி இல்லாததால் பொருளாதாரத்திலும் பெரிய முன்னேற்றம் காணமுடியவில்லை.

     தாய் மொழயில் கற்பதும் சிந்திப்பதும் தான் முன்னேற்றதை  தரும். தாய் மொழியில் கற்பதை குறைவாக எண்ண வேண்டாம்.. ஆங்கிலம் படிக்க முடிந்தவர்கள் படிக்கலாம். ஆங்கிலம் படிக்க முடியாதவர்களை வகுப்பு ஆசிரியர்களும் கேவலமாக திட்டக்கூடாது. 
ஜெர்மனி, பிரான்சு, சீனா, ஜப்பான், ரஷ்யா, போன்ற நாடுகள் ஆங்கிலம் மூலன் வல்லரசு ஆகவில்லை. நோபல் பரிசு பெற்ற பல மேதைகளுக்கு ஆங்கிலம் தெரியாது. 

பிரச்சனைகள் ... .... ....

January 15, 2011

        பிரச்சனைகள் என்பது பொதுவானவை. எல்லா உயிர்களும் பிரச்சனைகளை எதிர் கொள்கின்றன. முடிந்தவை சமாளிக்கும். முடியாவிட்டால் ஓடிவிடும். மனிதன் மட்டும் கடைசி வரை போராடுவான். தோற்றால் கூட  மறுபடி முயற்சிப்பான். பிரச்ச்னைகளுக்கு தீர்வு காணும் வரை முயற்சிப்பான்.


   மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள மிகப்  பெரிய வித்தியாசமே போராடுவது, தீர்வு காண்பது, வெற்றிபெறுவது தான்.

மந்தை உணர்வு.....

   மனிதன் மந்தயுணர்வு உள்ளவன். கூடி வாழ்வதையே  விரும்புபவன். முதலில் அவனுக்கு தேவைப்படுவது பாதுகாப்பு. அதற்கு அவனுக்கு கூட்டம் அவசியமாகிறது. .   அடுத்து அவனுடைய உணர்வுகளின் வெளிப்பாடு. அதற்க்கு எதிர் பால் ஆண் பெண் உறவு தேவை. அப்படியானால் தனி மனிதனாக வாழ முடியாது.  விரும்புவதுவும் இல்லை  நாகரிகம்  வளர வளர  மனிதனுக்கு மேலும் உறவுகள் தேவைப்படுகிறது.


        அதோடு மனிதன் சுயநலமிக்கவன். தனக்கு ஏதாவது பயன் கிடைத்தால் தான் மற்றவர்களுக்கு உதவுவான். ஒவ்வருக்கும் ஒரு திறமை , ஒரு ஆற்றல் இருக்கும். அதை மற்றவர்களுக்கு பயன் படித்ததினால் அவர்களும் மற்றவர்களுக்கு உதவ முன்
வருவார்கள்.

    

அறிவு என்பது ...........

      அறிவு என்பது தமிழர்களைப் பொறுத்தவரை


       எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள்
       மெய் பொருள் காண்பது அறிவு.


      தொட்டனைதூரும் மணற்கேணி மாந்தருக்கு
       கற்றனைதூரும் அறிவு.        
  
        யார் எது  சொன்னாலும் அது உண்மைதானா என்று கண்டறிய
தேவைப்படுவது அறிவு.
    
        அதேப்போல பல செய்திகள் கற்றிருந்தால் தான் அறிவு வளரும்.   எதை சொன்னாலும் நம்புவதற்கும் நமக்கும் பல செய்திகள் தெரிந்து இருப்பதற்கும் நாம் கற்க வேண்டும்.

      அப்படியானால் அறிவு என்பது இயற்கையான உணர்வு அல்ல. சூழ்நிலைகளால் மனிதன் கற்பது தனக்கு தேவையனவற்றை ஏற்ப்பது அறிவாகிறது.


        அறிவு என்பது ஐம்புலன் அனுபவ எல்லைக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். இம்புலத்திற்க்கும் புற உலகப் பொருட்களுக்கும் இடையே ஏற்படும் உறவின் விளைவாக அறிவு உருவாகிறது. 

ஆறு உணர்வுகள்

January 13, 2011

           மனிதனுக்கு ஆறு அறிவு என்று சொல்கிறோம். ஐந்து புலன்களின் அறிவு ஐந்து   என்றும் பகுத்தறிவு ஆறாம் அறிவு என்பதும்  வழக்கு. ஐந்து  அறிவு என்பது ஐந்து  புலன்களின உணர்வு. உணர்வுகளை பிரித்துப்  பார்த்து உணர்வது பகுத்தறிவு.

         அப்படியானால் ஆறு உணர்வுகளையும் ஆறு உணர்வுகள்  என்று ஏன் சொல்லக்கூடாது ?
         உணர்வு என்பது தன்னால் இயற்க்கையாக  இயங்குவது. அது உள்ளுணர்வு. யாரும்   சொல்லிகொடுத்து செய்வதில்லை. பிறந்த கன்று  தாயைத தேடி ஓடுவதும் பால் குடிப்பதும இயற்க்கை. அது அறிவாகாது. உணர்வு.


      அறிவு என்பது எப்பொருள் யார் யார் வாய் கேர்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு.  மெய்ப் பொருள் காண்பது எப்போது ? உணர்வுகளின் அனுபவமும் மற்றவர்களிடம்  பார்ப்பதும்  கேட்பதுவும் மனிதனுக்கு ஒரு பாடத்தைக் கற்றுத் தருகிறது  தனக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முன்னேறுவதை மனிதன் விரும்புகிறான். அவற்றைப் பற்றிக்கொள்கிறான். அது அறிவு.  அதையும்  விழ்ப்புணர்வு என்றும் சொல்லலாம்.


       கற்கால மனிதன் இப்படித்தான் நாகரிக மனிதனாக மாறி இருப்பான். கற்கால மனிதன் உணர்வுகளால் உந்தப்பட்டு செயல் பட்டான். அதில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு
காணும் நோக்கில் தன்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டான்.


     அப்படியானால் மனிதனின் அடிப்படையானது உணர்வுகள் தான். அறிவு இல்லை. உணர்வு கொண்டு தான் இயங்குகிறான்.


    பொதுவான அனைத்து உயிர்களின் உணர்வுகள் --  புலன் உணர்வுகள் பார்த்தல்,கேட்டல்,நுகர்தல், சுவைத்தல், போக முதலில் பசி உணர்வு. அடுத்து பாதுகாப்பு உணர்வு, இச்சை உணர்வு.     பிரசனைகள் வரும் போது பய உணர்வு, பின் எச்சரிக்கை உணர்வு இப்படி உயரினங்கள் வாழத் தொடங்குகிறது.


  மனிதன் மட்டும் விழிப்புணர்வு கொண்டு இயங்குகிறான். முதலில் பார்த்து கேட்டு தெரிந்து கொள்கிறான். கண்டதையும் பார்த்ததையும் மனதில் பதித்து வைத்துக் கொண்டு எச்சரிக்கையாக அடுத்த நடவடிக்கைள் செய்கிறான்.




  
 
Related Posts Plugin for WordPress, Blogger...

Lorem

அம்பேத்கர்...... (1) அறம் செய்ய விரும்பு ..... (1) அறியாமை (1) அறிவு என்பது ....... (1) அலட்சியம் (1) ஆறு உணர்வுகள் (1) ஆளுமை --- நேரம் .......... (1) இந்துக்கள் .......... (1) உணர்ச்சிவயம் ...... (1) எம்மைப் பற்றி ................. (1) கல்வி பொருளாதார விழிப்புணர்வு .. (1) காந்தி (1) சட்டம் .... .விதிகள் .... (1) தாழ்வு (1) தீதும் நன்றும் ....... (1) நம்மைப் பற்றி......நம் கருத்தைப் பற்றி... (1) நான்கு வகை ஆற்றல் மனிதர்கள் ...... (1) நேரு (1) பணக்கார ஏழை இந்து தெய்வங்கள் -------- (1) பணிவு (1) பருவம்.......... (1) பலகீனமானவர்கள் .... (1) பிரச்சனைகள் ... .... . (1) புகைப்படம் (1) பொருளாதாரம்........சேமிப்பு.. (1) மந்தை உணர்வு.... (1) மனது ....... (1) முயற்சி .....பயிற்சி.. பழக்கம் ..வழக்கம் ...அனிச்சை செயல் .. (1) மூன்று வகை உழைப்பு..... (1) மொழி ...... .. (1) விவசாயிகள் .......... (1) வீண் முயற்சி ....... விடா முயற்சி........... (1) வேத சடங்கு -- ஆகம வழிபடு. (1)

Ipsum

அம்பேத்கர்...... (1) அறம் செய்ய விரும்பு ..... (1) அறியாமை (1) அறிவு என்பது ....... (1) அலட்சியம் (1) ஆறு உணர்வுகள் (1) ஆளுமை --- நேரம் .......... (1) இந்துக்கள் .......... (1) உணர்ச்சிவயம் ...... (1) எம்மைப் பற்றி ................. (1) கல்வி பொருளாதார விழிப்புணர்வு .. (1) காந்தி (1) சட்டம் .... .விதிகள் .... (1) தாழ்வு (1) தீதும் நன்றும் ....... (1) நம்மைப் பற்றி......நம் கருத்தைப் பற்றி... (1) நான்கு வகை ஆற்றல் மனிதர்கள் ...... (1) நேரு (1) பணக்கார ஏழை இந்து தெய்வங்கள் -------- (1) பணிவு (1) பருவம்.......... (1) பலகீனமானவர்கள் .... (1) பிரச்சனைகள் ... .... . (1) புகைப்படம் (1) பொருளாதாரம்........சேமிப்பு.. (1) மந்தை உணர்வு.... (1) மனது ....... (1) முயற்சி .....பயிற்சி.. பழக்கம் ..வழக்கம் ...அனிச்சை செயல் .. (1) மூன்று வகை உழைப்பு..... (1) மொழி ...... .. (1) விவசாயிகள் .......... (1) வீண் முயற்சி ....... விடா முயற்சி........... (1) வேத சடங்கு -- ஆகம வழிபடு. (1)

ContactMe

wibiya widget

Dolor

அம்பேத்கர்...... (1) அறம் செய்ய விரும்பு ..... (1) அறியாமை (1) அறிவு என்பது ....... (1) அலட்சியம் (1) ஆறு உணர்வுகள் (1) ஆளுமை --- நேரம் .......... (1) இந்துக்கள் .......... (1) உணர்ச்சிவயம் ...... (1) எம்மைப் பற்றி ................. (1) கல்வி பொருளாதார விழிப்புணர்வு .. (1) காந்தி (1) சட்டம் .... .விதிகள் .... (1) தாழ்வு (1) தீதும் நன்றும் ....... (1) நம்மைப் பற்றி......நம் கருத்தைப் பற்றி... (1) நான்கு வகை ஆற்றல் மனிதர்கள் ...... (1) நேரு (1) பணக்கார ஏழை இந்து தெய்வங்கள் -------- (1) பணிவு (1) பருவம்.......... (1) பலகீனமானவர்கள் .... (1) பிரச்சனைகள் ... .... . (1) புகைப்படம் (1) பொருளாதாரம்........சேமிப்பு.. (1) மந்தை உணர்வு.... (1) மனது ....... (1) முயற்சி .....பயிற்சி.. பழக்கம் ..வழக்கம் ...அனிச்சை செயல் .. (1) மூன்று வகை உழைப்பு..... (1) மொழி ...... .. (1) விவசாயிகள் .......... (1) வீண் முயற்சி ....... விடா முயற்சி........... (1) வேத சடங்கு -- ஆகம வழிபடு. (1)