உலகிலுள்ள அனைத்து பொருள்களிலும் காரியங்களிலும் நிறைகளும் குறைகளும் பகிர்ந்து தான் இருக்கும். நமக்கு வேண்டியவைகளாக இருக்கும் போது நாம் விரும்புபவை வேண்டாத சமயம் குறையாகும் குற்றமாகும் தோன்றும்.
இயற்க்கை கூட இதற்கு விதி விலக்கல்ல. மழை சில சமயங்களில் பிடிக்கும். சில நேரங்களில் பிடிக்காமல் போகிறது. தேவை இருக்கும் போது பிடிக்கும் மழை நமக்கு சிரமம் கொடுக்கும் போது பிடிக்காமல். இதை போல எல்லாமே சில நேரங்களில் பிடிப்பது பிடிக்காமல் போவதுண்டு. இள வெயில் . நண் பகல் வெயிலில் பிடிப்பதில்லை.
இதை போலத் தான் மனிதர்களும் சில நேரங்களில் பிடிக்கும். சில நேரங்களில் பிடிப்பதில்லை. நம்மோடு ஒத்த கருத்தும் நமக்கு பயன் உள்ளவர்களாக இருப்பவர்கள் முதலில் மிக மிக பிடிக்கும். அடுத்து நம் உறவினர்கள் சில நண்பர்கள் என்றாவது பயன் படுவார்கள் என்று நினைத்து பிடிப்பவர்கள் போல் பழகுவோம். ஏழை எளியவர்களுடனும் வலிமை குன்றியவர்களிடமும் மனித நேயத்தோடு பழகுவோம். ஆனாலும் இவர்கள் அனைவருடனும் கருத்து வேறுபாடு கண்டு விலகுவதும் கோபித்துக் கொள்வதும் உண்டு. இது அவர்களிடம் நாம் காணும் குறைகள் என்று நமக்கு நாமே கூறிக்கொள்ளும் சமாதானம்.
உண்மை என்ன வென்றல் நிறை குறை உள்ளவை தான் அனைத்துமே என்ற சிந்தனை நமக்கு வளரத் தொடங்கினால் அனைத்துமே நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும். அது தான் சிறந்த பண்பாடு. மனித நேயம்.
0 மறுமொழிக...:
Post a Comment