நீர், நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம் ......
May 10, 2011
ஐம்பெரும் பூதம் என்று தமிழர்களால் சொல்லப் படும் நீர், நிலம்,நெருப்பு,காற்று மற்றும் ஆகாயம் தான் உயிர்கள் உற்பத்தியாகவும் உயிர் வாழவும் இன்றியமையாதது.
நுண் உயிர்கள் ஒளி சேர்க்கை செய்யும் பொது ( நீர் + காற்று + சூரிய ஒளி ) பாசி இன தாவரம் உற்பத்தியாகிறது .இது தன் நிலை மாற்றம். பாசியின் விரிவாக்கம் தாவரங்கள்.
அது துளிர்விட்டு தண்டாகி, இலையாகி, அரும்பாகி, பூவாகி,காய் கனியாகி கனியில் இருந்து விதையாகிறது. விதை மண்ணில் விழுந்து மறுபடி செடியாகிறது. . நுண் உயிரிலிருந்து கண்ணுக்கு புலப்படும் செடி கொடி உருவானது. தாவரத்தின் ஓவ்வொரு பகுதிவும் உயிர் அணுவோடு இருப்பதால் அதை பிடுங்கி வேறொரு இடத்தில் வைத்தாலும் அது துளிர் விட முடியும். தாவரங்களுக்கு உள்ள முதல் உணர்வு இப்படி இனப்பெருக்கம் செய்வது.
ஒரு செடியில் ஒரு இலை வறண்டு மற்ற இலை ஈரப் பதத்தோடு இருக்கும் போது வறண்ட இலை தன்னைத் தானே சுருடிக் கொண்டு பக்கத்தில்
உள்ள இலையின் நீரை உறிஞ்சும். உயிர் வாழ இலை செய்யும் இரண்டாம்
நிலை. அது உறிஞ்சும் பகுதி வாயாகி சுருள் புழுவாகிறது . இரண்டாம் .உணர்வு
அதே போல தரையில் கிடக்கும் விதைகள் போதிய நீர் ஒளி கிடைக்காமல் துளிர் விட முடியாமல் விதையின் உள்ளேயே புழுவாகி விடுகிறது. அரிசி, பருப்பு, கோதுமை போன்ற பொருட்களை கற்று புகாமல் மூடி வைத்திருந்தால் புழு உண்டாவதை பார்த்திருப்போம்.
.
நிறை ......குறை .....
உலகிலுள்ள அனைத்து பொருள்களிலும் காரியங்களிலும் நிறைகளும் குறைகளும் பகிர்ந்து தான் இருக்கும். நமக்கு வேண்டியவைகளாக இருக்கும் போது நாம் விரும்புபவை வேண்டாத சமயம் குறையாகும் குற்றமாகும் தோன்றும்.
இயற்க்கை கூட இதற்கு விதி விலக்கல்ல. மழை சில சமயங்களில் பிடிக்கும். சில நேரங்களில் பிடிக்காமல் போகிறது. தேவை இருக்கும் போது பிடிக்கும் மழை நமக்கு சிரமம் கொடுக்கும் போது பிடிக்காமல். இதை போல எல்லாமே சில நேரங்களில் பிடிப்பது பிடிக்காமல் போவதுண்டு. இள வெயில் . நண் பகல் வெயிலில் பிடிப்பதில்லை.
இதை போலத் தான் மனிதர்களும் சில நேரங்களில் பிடிக்கும். சில நேரங்களில் பிடிப்பதில்லை. நம்மோடு ஒத்த கருத்தும் நமக்கு பயன் உள்ளவர்களாக இருப்பவர்கள் முதலில் மிக மிக பிடிக்கும். அடுத்து நம் உறவினர்கள் சில நண்பர்கள் என்றாவது பயன் படுவார்கள் என்று நினைத்து பிடிப்பவர்கள் போல் பழகுவோம். ஏழை எளியவர்களுடனும் வலிமை குன்றியவர்களிடமும் மனித நேயத்தோடு பழகுவோம். ஆனாலும் இவர்கள் அனைவருடனும் கருத்து வேறுபாடு கண்டு விலகுவதும் கோபித்துக் கொள்வதும் உண்டு. இது அவர்களிடம் நாம் காணும் குறைகள் என்று நமக்கு நாமே கூறிக்கொள்ளும் சமாதானம்.
உண்மை என்ன வென்றல் நிறை குறை உள்ளவை தான் அனைத்துமே என்ற சிந்தனை நமக்கு வளரத் தொடங்கினால் அனைத்துமே நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும். அது தான் சிறந்த பண்பாடு. மனித நேயம்.
சமூகப் பணி, அரசியல் பணி .....
April 21, 2011
சமூகப் பணி மனித நேயமுள்ள தியாக மனப் பான்மை. எதிர்பார்ப்பின்றி மற்றவர்களுக்கு உதவுவது. தனக்கு இழப்பு, இடையூறு ஏற்பட்டாலும் அதை எதிர் கொள்வது. தன்னுடைய இன்பத்தை விட மற்றவர்களின் இன்பத்தில் அல்லது துயர் நீக்கத்தில் அக்கறை கொள்வது. இயற்கையான கூட்டுறவு மனநிலை கொண்டது.
இதில் பெறுவது மனநிறைவு, குடும்பத்தினருக்கு சமூகத்தில் மரியாதை, வாழ்வியல் அனுபவம், புகழ்.
அரசியல் பணி சமூகப் பணியாக இருந்தாலும் அதிகாரம் சார்ந்ததாக இருக்கும். அதிகாரம் என்று வந்த உடனையே வலிமை என்று ஒன்று வந்து விடுகிறது. வலிமை வந்தவுடன் மெலிமை வருகிறது. வலியவர் மெலியவரை அடக்க வேண்டிஇருக்கிறது. அல்லது அவர்களைப் பயன் படுத்த வேண்டி
வுள்ளது. . தன்னை வலுவுள்ளவனாக மாற்ற சமூகத்தை கவர வேண்டிவுள்ளது. தனக்கு ஆதரவாளர்களை உருவாக்குவது.செயற்கை மனிதனாக மாறுவது. பல விசயங்களை மறைப்பது.
அரசியல் கோட்பாடு
April 19, 2011
அறிவு கோட்பாட்டுக்கும் இன்பக் கோட்பாட்டுக்கும் அரசியல் கோட்பாடு அடித்தளம்.
விருப்பு வெறுப்பு என்ற இரு உணர்வுகளின் மோதல் இல்லாத மனித வாழ்க்கை இல்லை.
விருப்பப் படும் பொருளை அடைவதும் வெறுக்கப்படும் பொருளை விலக்குவதும் இன்பம் தரும். இந்த இன்பத்தைப் பெற தேவைப்படும் கருவி அதிகாரம்.
அதிகாரம் எனபது உடல் வலிமை, அறிவாற்றல், பொருள், புகழ், செல்வம், நட்புறவு இப்படி எதன் மூலமாகவும் வெளிப்படலாம்.
இதன் மூலம் பயிலப் படும் விருப்பு வெறுப்பு, இன்பம் துன்பம், அதிகாரம் அறிவு கொண்டு அரசியல் தத்துவம் உருவாக்க வேண்டும்.
மனிதர்கள் அனைவரிடமும் காணப்படும் அடிப்படைப் பண்பு அச்சம்.
1. மனிதர்களின் நான்கு துறைகள் - 1. உளவியல், 2.சமூகவியல்,
3. சமயவியல், 4. இயற்கைவியல் .
மனிதர்கள் அனைவரிடமும் காணப்படும் அடிப்படைப் பண்பு அச்சம்.
1. மனிதர்களின் நான்கு துறைகள் - 1. உளவியல், 2.சமூகவியல்,
3. சமயவியல், 4. இயற்கைவியல் .
2. அரசாங்க இலக்கண வரையறைகள்:
1.ஆட்சிமுறை, 2. உரிமைகள், 3.சட்டம், 4.குற்றம்,
5.தண்டனை, 6.விருதுகள் (பாராட்டு)
3. சமயம் சார்பானது ;
1. இறைவன், 2.சமயம், 3.சமய நூல்கள்ளின் ஏற்புடமை,
4. அற்புதங்கள், 5.சுவர்க்கம், 6.நரகம், 7.சமயவாதிகளின்
அதிகாரம், 8. சமயத்துரையில் அரசின் ஆதிக்கம்.
4. அற்புதங்கள், 5.சுவர்க்கம், 6.நரகம், 7.சமயவாதிகளின்
அதிகாரம், 8. சமயத்துரையில் அரசின் ஆதிக்கம்.
இவை மூன்றும் மனிதனை இயக்குகிறது.
முதலில் மனிதனின் ஆசையை நிறைவு செய்வதற்கு என அதிகாரத்தைப் பெறவும், பெருக்கிக் கொள்ளவும் ஓய்வின்றி உழைக்கிறான். செயல் படுகிறான். அனால் வாய்ப்புகளும் வசதிகளும் குறைவே.
வலிமையாலோ வஞ்சகத்தலோ ஒருவன் ஒரு பொருளை அடையலாம்.
அனால் அவனை விட வலிமையானவன் அந்த பொருள் மேல் ஆசை கொள்ளாதவரை.
அடுத்து இயற்கை நிலையில் ஒருவன் தன்னுடைய நலனை மட்டுமே முன்னிறுத்தி வாழ்கிறான். அதற்கு காரணம் பிறரால் தன்னுடைய உணர்வுகள்,
உரிமைகள், ஆசைகள் பாதிக்கப் படலாம் என்கிற அச்ச உணர்வுதான்.
அனால் தனித்து வள விரும்பும் மனிதன் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த உறவுகள் இன்றி அழிவான் எனபது உடலில் மற்றும் உளவியல் சார்ந்த உண்மை.
அறம் செய்ய விரும்பு .......
February 26, 2011
தமிழகத்தின் மேல் ஏற்பட்ட படை எடுப்புகள் பண்பாட்டு தாக்குதல்களால் தமிழர்களின் உண்மையான பண்பாடு பல திசைகளில் சென்று விட்டன. சுயநலம், பேராசை, பொருளாசை, அதிகார ஆசை என்று தலை தூக்க ஆரம்பித்தன. எத்தனை தாக்குதல்கள் ஏற்ப்பட்டாலும் நமது பழைய பண்பாடுகள் மறைய வில்லை. மாற வில்லை.
ஏழை எளியவர்களுக்கு உதவுவது, அவர்களுடைய அறியாமையை விலககுவது, விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவது என்று சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.
மனித ஆற்றல் எனபது எல்லோருக்கும் ஒன்று போல் இருப்பதில்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆற்றல், திறமை இருக்கும். அனைவரும் சேர்ந்தது தான் சமுதாயம், சமூகம் அனைவரும் இணைந்தால் தான் சமூகம் சிறப்பாக இயங்கும். தோன்றும்.
ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சமூகமும் அப்படித்தான்.ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருந்தால் எப்படி இருக்கும்.? ஒரு வேலையை சிறப்பாக செய்ய முடியுமா ? சிறப்பாக அந்த வேலை தான் முடியுமா ?
சமூகத்தில் சிலருக்கு படிக்க முடியும். சிலருக்கு உழைக்க முடியும். சிலருக்கு ஆலோசனை மட்டும் வழங்க முடியும். சுவையான உணவு சாப்பிட . அந்த தொழில் செய்யும் உழைக்கும் மக்கள் இல்லாவிட்டால் நமக்கு அது கிடைக்காது. விலை உயர்ந்த காரக இருந்தாலும் அதை ஓட்டும் ஓட்டுனர் இல்லாவிட்டால் நாம் நினைத்த இடத்துக்கு உடனே செல்ல முடியுமா ? இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருந்தும் பொருளாதாரத்தில் ஒரே மாதிரி இருப்பதில்லை.
அதிக ஆற்றல் உள்ளவர்கள், அதிகாரத்தில் பொருளாதாரத்தில் வலுவாக இருப்பர். ஆனால் பலர் வலு இல்லாதவர்களாகத் தான் இருபபர். அதனால்
அவர்களுடைய கல்வியும் பொருளாதாரமும் சிறப்பாக இருக்காது. ஏற்ற தாழ்வு சமூகம் இருக்கும். அதனிப் போக்க வலுவானவர்கள் வலு குறைந்த மனிதர்களுக்கு உதவ வேண்டும். இதைத்தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. அது பொருளாகவோ, அறிவாகவோ, விழிப்புனர்வகவோ இருக்கலாம்.
அவர்களுடைய கல்வியும் பொருளாதாரமும் சிறப்பாக இருக்காது. ஏற்ற தாழ்வு சமூகம் இருக்கும். அதனிப் போக்க வலுவானவர்கள் வலு குறைந்த மனிதர்களுக்கு உதவ வேண்டும். இதைத்தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. அது பொருளாகவோ, அறிவாகவோ, விழிப்புனர்வகவோ இருக்கலாம்.
பொருளாதாரத்தில் ஒரு மேல் கொள் சொல்லுவார்கள். மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்று கொடுக்க வேண்டும் என்று.
அது தான் அறம் செய்ய விரும்பு.......
விவசாயிகள் ...........
இந்திய விவசாயிகள் கடனில் பிறந்து கடனில் வாழ்ந்து கடனில் மடிகிறான் என்று ஒரு தகவல் உண்டு. உண்மையும் அது தான். இயற்கையையும்
மந்திரிகள் விவசஈயிகளோடு அமருவதில்லை.எதிர் கட்சிகளோடு அமர்வதால்
அது போதும் என்கின்றனர்.
ஒரு சதவீத பெரு வியாபாரிகளோடு அமர்ந்து அவர்கள் தேவைகள் வரி சலுகைகள் கேட்டறியப் படுகின்றன. ஆங்கில வணிக ஏடுகள் இதை பக்கம்பக்கமாக எழுதுகிறது. விவசயிகள் குறித்து மூச்சு விடுவதில்லை. அவர்களைப் பொறுத்த வரை விவசாயமும் விவசாயிகளும் பொருளாதாரத் தொல்லைகள் என எண்ணுகின்றனர்.
இந்த மேல் தட்டு வர்க்க பத்திரிக்கையாளர்களின் வாதம் விவசாயிகளுக்கு மான்யக் கடன், வெள்ளப் பாதிப்பு இழப்பீடு, பயிர்க் காப்பிட்டுத் திட்டம், அமைப்பு சார தொழிலாளர்கள் பாதுகாப்பு, வறுமை ஒழிக்க வேலை உறுதித் திட்டம் இத்தனைக் கொடுத்ததும் விவசாயிகள் பிரச்சனை தீரவில்லை எனபது ஆகும்.
விவசாயிகள் பிச்சைக்காரர்கள் அல்ல. சமுகத்தில் எந்த பிரிவுகளைக் காட்டிலும் சுயமரியாதையோடு உழைப்பு சார்ந்து வாழக் கூடியவர்கள். அவர்கள் தேவை இலவசங்களும் தள்ளுபடிகளும் இல்லை. தீர்வும் அல்ல. நவீன மாற்றங்களினால் ஏற்ப்படும் சவால்களுக்கு அரசு உதவ வேண்டும். உற்பத்தி பெருக்கும் திட்டத்தை விட சந்தை தான் பெரும் பிரச்சனை. உற்பத்திக்கு உரியவிலை அதன் சந்தையில் மட்டுமே கிடைக்கும். வியாபாரிகள் என்று இடைத் தரகர்கள் விலை நிர்ணயம் செய்வதை அரசு ஒழிக்க வேண்டும். அரசு உருவாக்கும் லாப நோக்கம் அற்ற கொள் முதல் நிலயங்கள், தானியங்கள் பதப்படுத்தி பாதுகாக்கும் வசதி.
பொதுமக்கள் தேவை, உற்பத்தி,விநியோகம் ஒளிவு மறைவு இன்றி இருத்தல் வேண்டும். இது அரசால் மட்டுமே முடிடும். காலக் கட்டுப்பாடு , தரக் கட்டுப்பாடு இவற்றால் விவசாயிகள் பாதிப்பே அடைகின்றனர்.
பன்னாட்டு நிறுவனகளுக்கு அரசு செய்யும் செலவில் பத்தில் ஒரு பங்கு
கிராமப் புற கட்டமைப்புக்கு செய்தால் பிரச்சனைகள் ஓரளவு தீர்க்க முடியும்.
உற்பத்தி, உரியவிலை, தடையட்ட்ற விநியோகம் பெரும்
உழைப்பையும் நம்பி தன்மானத்தோடு வாழ்பவன் இந்திய விவசாயி. விவசாயின் நிலை பல நூற்றாண்டுகளாக இப்படித்தான் இருக்கிறது. முடியாட்சி மாரி குடி யாட்சி வந்தும் சராசரி வியாசயின் நிலை மாறவில்லை.
கணிசமான வாக்கு வங்கிகளாக கிராம விவசயிகள் இருப்பதால் இந்தியா விவசாய நாடு தான் என்று நமது தலைவர்கள் முளங்கிக் கொண்டு இருக்கின்றனர். இது வரை 78 நிதி நிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. பெரு முதலாளிகள் பன் நாட்டு நிறுவனங்களோடு ஆலோசிக்கும் நிதிமந்திரிகள் விவசஈயிகளோடு அமருவதில்லை.எதிர் கட்சிகளோடு அமர்வதால்
அது போதும் என்கின்றனர்.
ஒரு சதவீத பெரு வியாபாரிகளோடு அமர்ந்து அவர்கள் தேவைகள் வரி சலுகைகள் கேட்டறியப் படுகின்றன. ஆங்கில வணிக ஏடுகள் இதை பக்கம்பக்கமாக எழுதுகிறது. விவசயிகள் குறித்து மூச்சு விடுவதில்லை. அவர்களைப் பொறுத்த வரை விவசாயமும் விவசாயிகளும் பொருளாதாரத் தொல்லைகள் என எண்ணுகின்றனர்.
இந்த மேல் தட்டு வர்க்க பத்திரிக்கையாளர்களின் வாதம் விவசாயிகளுக்கு மான்யக் கடன், வெள்ளப் பாதிப்பு இழப்பீடு, பயிர்க் காப்பிட்டுத் திட்டம், அமைப்பு சார தொழிலாளர்கள் பாதுகாப்பு, வறுமை ஒழிக்க வேலை உறுதித் திட்டம் இத்தனைக் கொடுத்ததும் விவசாயிகள் பிரச்சனை தீரவில்லை எனபது ஆகும்.
விவசாயிகள் பிச்சைக்காரர்கள் அல்ல. சமுகத்தில் எந்த பிரிவுகளைக் காட்டிலும் சுயமரியாதையோடு உழைப்பு சார்ந்து வாழக் கூடியவர்கள். அவர்கள் தேவை இலவசங்களும் தள்ளுபடிகளும் இல்லை. தீர்வும் அல்ல. நவீன மாற்றங்களினால் ஏற்ப்படும் சவால்களுக்கு அரசு உதவ வேண்டும். உற்பத்தி பெருக்கும் திட்டத்தை விட சந்தை தான் பெரும் பிரச்சனை. உற்பத்திக்கு உரியவிலை அதன் சந்தையில் மட்டுமே கிடைக்கும். வியாபாரிகள் என்று இடைத் தரகர்கள் விலை நிர்ணயம் செய்வதை அரசு ஒழிக்க வேண்டும். அரசு உருவாக்கும் லாப நோக்கம் அற்ற கொள் முதல் நிலயங்கள், தானியங்கள் பதப்படுத்தி பாதுகாக்கும் வசதி.
பொதுமக்கள் தேவை, உற்பத்தி,விநியோகம் ஒளிவு மறைவு இன்றி இருத்தல் வேண்டும். இது அரசால் மட்டுமே முடிடும். காலக் கட்டுப்பாடு , தரக் கட்டுப்பாடு இவற்றால் விவசாயிகள் பாதிப்பே அடைகின்றனர்.
பன்னாட்டு நிறுவனகளுக்கு அரசு செய்யும் செலவில் பத்தில் ஒரு பங்கு
கிராமப் புற கட்டமைப்புக்கு செய்தால் பிரச்சனைகள் ஓரளவு தீர்க்க முடியும்.
உற்பத்தி, உரியவிலை, தடையட்ட்ற விநியோகம் பெரும்
Subscribe to:
Posts (Atom)