பொருளாதாரம் என்பது உழைப்பு, உற்பத்தி, வணிகம், முதலீடு, சேமிப்பு, அடுத்து பகிர்ந்தளிப்பு. வளரும் நாடுகளில் உழைப்பு இருக்கும் அனால் பகிர்ந்தளிப்பு இருக்காது. அதற்கு போதுமான கல்வி, விழிப்புணர்வு இல்லாமையே முக்கிய காரணம்.
நம்முடைய பார்வை, உழைக்கும் மக்களை சேமிப்பு பழக்கத்திற்கு கொண்டு வருவது. . விலைவாசி அதிகமாக இருப்பதால் சேமிப்பு என்பது மிகக் குறைவாகத்தான் இருக்கும்.அல்லது இருக்காது. இருந்தாலும் அதற்க்கான விழிப்புணர்வு கொடுத்து சேமிக்கச் செய்ய வேண்டும். மனிதனின் அத்தியாவசிய ( உணவு, உடை, குடியிருப்பு ) தேவைகள் போக கேளிக்கைகள் மது, சூது போன்றவற்றில் செலவு செய்யக்கூடாது.
எளிய மருத்துவம், வாழ்க்கை கல்வி போன்றவற்றில் செலவு செய்ய வேண்டும். ஆடம்பர வாழ்க்கை, நுகர்வோர் பொருட்களுக்கு தன்னுடைய சேமிப்பு வளரும் வரை போகக் கூடாது.
சேமிப்பு என்பது மனிதனின் மிகப் பெரிய பொருளாதார விழிப்புணர்வு. தமிழர்களின் பண்பாட்டில் சேமிப்பு என்பது பரம்பரையனவை தான். வெள்ளையர்கள் இந்தியா, தமிழ் நாடு வந்தபின் மாறிய கலாசாரத்தில், சேமிப்பு பண்பாடும் மாறி நுகர்வோர்
கலாச்சரத்திற்ககுத் தள்ளப் பட்டு விட்டது.
தமிழர்கள் விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்த்து பொருளாதார வளர்ச்சி அடைந்தனர். அதில் கிடைத்த உபரி வருமானத்தை அல்லது இலாபாத்தை சேமித்து
விவசாய நிலம் மற்றும் தங்கம் முதலியவற்றில் முதலீடு செய்தனர்.
காலம் மாற தொழில் புரட்சி ஏற்பட்டு விவசாய நிலங்கள் தொழில்சாலைகள் ஆனது.
சாதாரண குடியருப்புகள் கான்கீரீட் வீடுகள் ஆனது. கைவினைக் கலைஞர்கள் தொழில் சார்ந்த வேலைகளுக்கு சென்றனர். படித்தவர்கள் தொழிட்சாலை நிர்வாகத்திற்கு இடம் பெயர்ந்தனர். நுகர்வோர் பொருட்கள் சந்தைக்கு வரத்தொடங்கின. தவணை முறையில் தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு கடன்காரர்கள் ஆக்கப்பட்டனர். சேமிப்பு பழக்கம் இல்லாமல் போனது.
விவசாயம் செய்து வந்தவர்களுக்கு வருடம் முழுவது வேலை கிடைப்பதில்லை. . இயற்க்கை சீற்றம் வேறு அவர்கள் உற்பத்தியை குறைத்தது. இல்லாமலும் செய்தது. குடும்பம் பெருக்கத்தால் நிலங்களும் துண்டு துண்டாக்கப் பட்டு வருமானம் போதிய அளவுக்கு இல்லாமல் போனது. இதனால் இவர்களின் சேமிப்பும் இல்லாமல் ஆனது.
இத்தனைக்கு இடையிலும் உலக நாடுகளில் இந்தியாவின் சேமிப்பு அதிகம் தான்.
அப்படியானால் விழிப்புணர்வு உள்ளவர்கள் சேமிக்கத்தான் செய்கிறார்கள். அடுத்தவர்களைப் பார்த்து தானும் அது போல்ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்புபவர்கள் தான் சிரமப்படுகிறார்கள். வரவு அறிந்து செலவு செய்பவர்கள் வெற்றி பெற்று விடுகின்றனர்.
அதனால் சேமிப்பு மிக மிக அவசியம். சேமித்த பணத்தை நல்ல இடத்தில் முதலீடு செய்வது அடுத்த நடவடிக்கை. இரண்டுக்கும் விழிப்புணர்வு தேவை.
நம்முடைய பார்வை, உழைக்கும் மக்களை சேமிப்பு பழக்கத்திற்கு கொண்டு வருவது. . விலைவாசி அதிகமாக இருப்பதால் சேமிப்பு என்பது மிகக் குறைவாகத்தான் இருக்கும்.அல்லது இருக்காது. இருந்தாலும் அதற்க்கான விழிப்புணர்வு கொடுத்து சேமிக்கச் செய்ய வேண்டும். மனிதனின் அத்தியாவசிய ( உணவு, உடை, குடியிருப்பு ) தேவைகள் போக கேளிக்கைகள் மது, சூது போன்றவற்றில் செலவு செய்யக்கூடாது.
எளிய மருத்துவம், வாழ்க்கை கல்வி போன்றவற்றில் செலவு செய்ய வேண்டும். ஆடம்பர வாழ்க்கை, நுகர்வோர் பொருட்களுக்கு தன்னுடைய சேமிப்பு வளரும் வரை போகக் கூடாது.
சேமிப்பு என்பது மனிதனின் மிகப் பெரிய பொருளாதார விழிப்புணர்வு. தமிழர்களின் பண்பாட்டில் சேமிப்பு என்பது பரம்பரையனவை தான். வெள்ளையர்கள் இந்தியா, தமிழ் நாடு வந்தபின் மாறிய கலாசாரத்தில், சேமிப்பு பண்பாடும் மாறி நுகர்வோர்
கலாச்சரத்திற்ககுத் தள்ளப் பட்டு விட்டது.
தமிழர்கள் விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்த்து பொருளாதார வளர்ச்சி அடைந்தனர். அதில் கிடைத்த உபரி வருமானத்தை அல்லது இலாபாத்தை சேமித்து
விவசாய நிலம் மற்றும் தங்கம் முதலியவற்றில் முதலீடு செய்தனர்.
காலம் மாற தொழில் புரட்சி ஏற்பட்டு விவசாய நிலங்கள் தொழில்சாலைகள் ஆனது.
சாதாரண குடியருப்புகள் கான்கீரீட் வீடுகள் ஆனது. கைவினைக் கலைஞர்கள் தொழில் சார்ந்த வேலைகளுக்கு சென்றனர். படித்தவர்கள் தொழிட்சாலை நிர்வாகத்திற்கு இடம் பெயர்ந்தனர். நுகர்வோர் பொருட்கள் சந்தைக்கு வரத்தொடங்கின. தவணை முறையில் தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு கடன்காரர்கள் ஆக்கப்பட்டனர். சேமிப்பு பழக்கம் இல்லாமல் போனது.
விவசாயம் செய்து வந்தவர்களுக்கு வருடம் முழுவது வேலை கிடைப்பதில்லை. . இயற்க்கை சீற்றம் வேறு அவர்கள் உற்பத்தியை குறைத்தது. இல்லாமலும் செய்தது. குடும்பம் பெருக்கத்தால் நிலங்களும் துண்டு துண்டாக்கப் பட்டு வருமானம் போதிய அளவுக்கு இல்லாமல் போனது. இதனால் இவர்களின் சேமிப்பும் இல்லாமல் ஆனது.
இத்தனைக்கு இடையிலும் உலக நாடுகளில் இந்தியாவின் சேமிப்பு அதிகம் தான்.
அப்படியானால் விழிப்புணர்வு உள்ளவர்கள் சேமிக்கத்தான் செய்கிறார்கள். அடுத்தவர்களைப் பார்த்து தானும் அது போல்ஆடம்பர வாழ்க்கை வாழ விரும்புபவர்கள் தான் சிரமப்படுகிறார்கள். வரவு அறிந்து செலவு செய்பவர்கள் வெற்றி பெற்று விடுகின்றனர்.
அதனால் சேமிப்பு மிக மிக அவசியம். சேமித்த பணத்தை நல்ல இடத்தில் முதலீடு செய்வது அடுத்த நடவடிக்கை. இரண்டுக்கும் விழிப்புணர்வு தேவை.
0 மறுமொழிக...:
Post a Comment