நீண்ட நெடும் காலமாக மொழியை ஒரு கருவியாக மக்கள் சித்தரித்து வந்தனர்.
பேச்சி மொழி, இலக்கிய மொழி, நாடக மொழி, வட்டார மொழி என வித்தியாசங்கள் உண்டு. தங்கள் எண்ணங்களை வெளி இடவும் பிறர் எண்ணங்களை கருத்துக்களை புரிந்து கொள்ளவும் மொழி ஒரு க்ருவியாகப பயன்பட்டது.
மேலோட்டமாக பார்த்தல் மொழி ஒரு கருத்தை வெளிப்படுத்தும்.சைகைகள்,
பாவனைகள், உருவம் ,வடிவம், அமைப்பு, சமிக்கைகள், கோடுகள், வண்ணம் கூட மொழி அர்த்தத்தில் கையாளப்பட்டன.
சமூகம் மொழியின் வாயிலாகவே இயங்குகிறது. தான் இருத்தலை
வெளிப்படுத்துகிறது. சமூக நடவடிக்கைகள் நடைபெறுகின்றன . முத்லில் பெற்றோர்
குழந்தைகள் உறவில் ஆரம்பித்து ஆசிரியர் மாணவன், மதகுரு சடங்குகள், அரசின் சட்டங்கள் அதிகாரங்கள், செயல்பாடுகள், நீதிமன்ற நடவடிக்கைகள் நிர்வாக பணிகள் இப்படி அனைத்து சமூக பணிகளும் மொழியின் மூலமாகவே செயல் படுகின்றன.
அப்படியானால் மொழி இல்லையேல் சமூகம் இல்லை. சமூகம் இல்லையேல் மொழி இல்லை.
வளர்ச்சி போக்கில மக்கள், சமூகம், தேசிய இனம், தேசியங்கள் என பரிணாமித்தது .மொழியே தேசத்தை, இனத்தை அடையாளப் படுத்தியது. பிரஞ்சி, ஜெர்மன், சைனா இப்படி பிரஞ்சி பேசுபவர்கள் பிரஞ்சி தேசம், ஜெர்மன் பேசுபவர்கள் ஜெர்மன் தேசம், சீனம் பேசுபவர்கள் சீன தேசம், ஜப்பான் இப்படி மொழி வாரியாக தேசம் அடையாளப் படுத்தப்பட்டுகிறது.
ஒரு நாடு மற்ற நாட்டடை பிடித்தாலோ ஏதோ ஒரு வகையில் அடிமைப்படுத்த நினைத்தாலோ முதலில் அந்த நாட்டின் மொழியை பின்னுக்குத் தள்ளிவிட்டு தன்னுடைய மொழியை முன்னிருத்தும். ஆட்சி மொழி, அதிகார மொழி, கல்வி மொழி நீதிமன்ற மொழி இப்படி முக்கியமான நிகழ்வுகளிளெல்லாம் அந்நிய மொழியை பயன்படுத்த ஆரம்பிக்கும். சமூக மொழி தானாக பின்னுக்குப் போய்விடும்.
தங்களுடைய நலனுக்கு ஏற்ப கருத்தாக்கங்கள் இலக்கியங்கள் செய்திகள் என்று அந்நிய மொழி தாராளமாக அடிமைப்படுத்த நாட்டில் புழக்கத்தில் வந்து மக்கள் செய்திகள் எல்லாம் அநிநிய செய்த்களாக மாறுகின்றன. அந்நிய மொழி படித்தால் தான் அரசு வேலை என்கின்ற நிலை கூட வந்துவிடும். இப்படியே அந்நிய மொழி நிலைநாட்டப் படும்.
இப்படித்தான் தேசிய மொழியாக இருந்த தமிழ் மொழி ஆங்கில ஆட்சியல் பின்னுக்குத் தள்ளப் பட்டது. ஆங்கிலேயர் சென்றபின்னும் கூட பல மொழிக்ழ்ளைக் கொண்ட இந்தியாவில் டெல்லி அதிகாரத்தை வைத்துக் கொண்டதால் ஆங்கிலம் தவிர்க்க முடியாத மொழியாகி விட்டது.
ஒரு நாடு மற்ற நாட்டடை பிடித்தாலோ ஏதோ ஒரு வகையில் அடிமைப்படுத்த நினைத்தாலோ முதலில் அந்த நாட்டின் மொழியை பின்னுக்குத் தள்ளிவிட்டு தன்னுடைய மொழியை முன்னிருத்தும். ஆட்சி மொழி, அதிகார மொழி, கல்வி மொழி நீதிமன்ற மொழி இப்படி முக்கியமான நிகழ்வுகளிளெல்லாம் அந்நிய மொழியை பயன்படுத்த ஆரம்பிக்கும். சமூக மொழி தானாக பின்னுக்குப் போய்விடும்.
தங்களுடைய நலனுக்கு ஏற்ப கருத்தாக்கங்கள் இலக்கியங்கள் செய்திகள் என்று அந்நிய மொழி தாராளமாக அடிமைப்படுத்த நாட்டில் புழக்கத்தில் வந்து மக்கள் செய்திகள் எல்லாம் அநிநிய செய்த்களாக மாறுகின்றன. அந்நிய மொழி படித்தால் தான் அரசு வேலை என்கின்ற நிலை கூட வந்துவிடும். இப்படியே அந்நிய மொழி நிலைநாட்டப் படும்.
இப்படித்தான் தேசிய மொழியாக இருந்த தமிழ் மொழி ஆங்கில ஆட்சியல் பின்னுக்குத் தள்ளப் பட்டது. ஆங்கிலேயர் சென்றபின்னும் கூட பல மொழிக்ழ்ளைக் கொண்ட இந்தியாவில் டெல்லி அதிகாரத்தை வைத்துக் கொண்டதால் ஆங்கிலம் தவிர்க்க முடியாத மொழியாகி விட்டது.
0 மறுமொழிக...:
Post a Comment